வெள்ளி, 2 ஜூன், 2017

சோகம் நெஞ்சைப் பிழிகிற இந்தச் செய்தியை
வாசிக்கும் மனவலிமை எனக்கில்லை ஐயா. 

தம்பி, நான் என் காலத்துத் தமிழில் எழுதுவேன்.
இன்றைய தலைமுறை அதைப் புரிந்து கொள்ள
வேண்டும். சௌஜன்யம் =நல்லிணக்கம்.

ஆடம்பர வாழ்க்கை!
கட்சியில் இருந்து நீக்கம்!
---------------------------------------------
மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா
எம்.பி  திரு ரிதபிரதா பானெர்ஜி கட்சியில் இருந்து
சஸ்பெண்டு செய்யப் .பட்டுள்ளார்.

இவர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததால்
கட்சியில் இருந்து 3 மாதம் சஸ்பெண்டு செய்யப்
பட்டுள்ளார். விலை உயர்ந்த எலக்ட்ரானிக்
சாதனங்களைப் பயன்படுத்தியது, நுகர்வுக்
கலாச்சாரத்தில் மூழ்கித் திளைத்தது என்பன 
போன்ற ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார் இவர்.
இது கட்சி சித்தாந்தத்திற்கு எதிரான நடத்தை
என்பதால், இவர் சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார்.
*****************************************************************   

கஷ்ட ஜீவிகள்
நாங்கள் கம்யூனிஸ்டுகள்
மார்க்சிஸ்டுகள்
நாங்கள் லெனினிஸ்டுகள்!
---புரட்சிக் கவிஞர்
சுப்பாராவ் பாணிக்கிரஹி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக