வெள்ளி, 2 ஜூன், 2017

மாட்டுக்கறி உண்ணும்
அடையாள அரசியல் நிகழ்ச்சிகள்
வர்க்க ரீதியாக மக்கள்
அணிதிரள்வதைத் தடுத்து
வர்க்கப் போராட்டத்தைக்
காயடிக்கும்
எதிர்ப்புரட்சிகர செயலே!  

"நிலக்குப் பொறை" .என்கிறார் வள்ளுவர்.
பூமிக்குப் பாரம் என்று இதற்கு அர்த்தம்.
பூமிக்குப் பாரமாக இருக்காதே, போய்த் தொலை
என்று அர்த்தம்.


திரு வேதியன் வேதியன் அவர்களுக்கு,
நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு   கற்பனையில்
எழுதுகிறீர்கள்; நான் சிரமம் மேற்கொண்டு நேரில்
சென்று பலரையும் விசாரித்து எழுதுகிறேன். எனவே
என்னால் உண்மையை எழுத முடிகிறது.
**
வாக்குவாதம் கைகலப்பில் முடிந்து விட்டது.
இரண்டு மாணவர்களும் அடிபட்டு இருக்கிறார்கள்.
அடித்தது சரி என்று நான் எங்குமே சொல்லவில்லை.
நீங்களாக கற்பனை செய்து கொண்டு பேசுகிறீர்கள்.
தமிழன்  எவனும் அடிபடவில்லை. பீகார் மாணவனும்
கேரளா மாணவனும் அடித்துக் .கொண்டார்கள்.
**
இதை பீஹார் கேரளா என்று பார்ப்பதோ அல்லது
பீஹார் தமிழ்நாடு என்று பார்ப்பதோ  கேடுகெட்ட
இனவாதம். நான் உள்ளது உள்ளபடி எழுதி இருக்கிறேன்.
யாருக்கும் சப்பைக்கட்டு காட்டவில்லை. எனவே
வார்த்தையை அளந்து பேசவும். உங்களுக்குப்
புரியவில்லை  என்றால், சரியாகப் படித்துப்
புரிந்து கொண்டு, அதன் பிறகு பேசுவது நல்லது.
**
எனது பதிவுகள் முதிர்ந்த வாசகத்தன்மை  உள்ள
வாசகர்களுக்காக  எழுதப் .படுகின்றன. உங்களைப்
போன்றவர்களுக்காக அல்ல.

இருவரையும் சமரசப் படுத்துவது நல்லவர்கள் கடமை
என்று எழுதி இருக்கிறேன். இருவரையும் பகையாளியாக்கி
ஆதாயம்  தேடுவது என்ஜிஓ சக்திகள். இந்தப் பதிவு
சாராம்சத்தில் என்ஜிஓ  அரசியலைக் கடுமையாக
எதிர்க்கிறது. அதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.
இதில் யாருக்காவது வலிக்கிறது என்றால், அவர்
என்ஜிஓவின் கைக்கூலியாகத்தான் இருக்க முடியும்.

அதிர்ஷ்டவசமாக, இந்தச் சண்டையில் ஈடுபட்ட
இரு மாணவர்களும் ஒரே மதம். சாதியும் இங்கு
பிரச்சினையாக .இல்லை. அதுதான்
என்ஜிஓக்களுக்கு வருத்தம்.
**
அடுத்து அடையாள அரசியலை
மேற்கொள்வோர் சாராம்சத்தில் ஜனநாயக
சக்திகளாக இருப்பதில்லை. அங்கொன்றும்
இங்கொன்றுமாக அவர்கள் சில ஜனநாயகக்
கோரிக்கைகளில் இயக்கம் நடத்தி இருந்தாலும்
சாராம்சத்தில் அனைத்தையும் தங்களின் அடையாள
 நலன்களுக்கு கீழ்ப் படுத்தி விடுகிறார்கள். எனவே
என்ஜிஓ அரசியலையும் அடையாள அரசியலையும்
எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்க வேண்டியது
புரட்சிகர  சக்திகளின் கடமை ஆகிறது.

 
இதில் என்ன தப்பு? ஐயா, உண்மைக்குத் தான்
ஆதாரம் தர வேண்டும். புராணம் என்றால் என்ன
வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதுதான்.
ஒருவன் எதை வேண்டுமானாலும் சொல்லும்போது
அதற்கு ஆதாரம் எப்படி இருக்க முடியும்? ஆதாரத்தை
யார் தர முடியும்? கிருஷ்ண பரமாத்மாவும் டொனால்ட்
டிரம்பும் நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கி
வேலு மிலிட்டரி ஓட்டலில் டைனோசர் வறுவல்
சாப்பிட்டார்கள் என்பதற்கு யார் ஆதாரம் தர முடியும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக