செவ்வாய், 20 ஜூன், 2017

பஃ றுளி ஆறு கற்பனையா?
குமரிக் கண்டத்தை
கடல் விழுங்கிய வரலாறு பொய்யா?
தமிழன் எப்படி வந்தேறி ஆவான்?

கிழக்கு ஆசியாவில்
இருந்து வந்த வந்தேறிதான்
தமிழனுக்கு நெல் விவசாயம்
கற்றுக் கொடுத்தானா?
இந்து ஏட்டில் ஜோசப் கட்டுரை!


ஆரிய திராவிடப் புதிரை
விடுவித்தேன்! எப்படி?
ஆரியனும் வந்தேறி! திராவிடனும்
வந்தேறி! தமிழனும் வந்தேறி!
எல்லா நாயும் வந்தேறி நாயே!

ஆரியர்கள் அறிந்தவர்களாகவே இருக்கட்டும்.
தமிழன் ஆரியனிடம் இருந்துதான் விவசாயம்
செய்யக் கற்றுக் கொண்டானா?

டோனி ஜோசப் எழுதிய கட்டுரையின் முக்கிய
கருத்தை, அதன்  சாரத்தை கடைசிப் பத்தியில்
எழுதி உள்ளார். நாம் எல்லோருமே வந்தேறிகள்தான்
என்கிறார். ஆங்கிலத்தில் "WE ARE ALL MIGRANTS" என்று
கட்டுரையை முடிக்கிறார்.

இந்தோனேசியா என்பதெல்லாம் 4000, 5000
ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாதான். கடல் கொண்ட
கபாடபுரம், குமரிக் கண்டம்  பற்றிய ஆய்வே
இல்லாமல், வந்தடைந்த முடிவுகள்
அறிவியல்பூர்வமானவை அல்ல.

பரந்து விரிந்த இந்தியத் துணைக்கண்டத்தில்
பூர்வகுடிகளே இல்லை;  எல்லோருமே
வந்தேறிகள்தான் என்பது அறிவியலுக்கு எதிரானது.
இந்தக்

சாம்பிள் என்ன ராணுவ ரகசியமா?
அதை அல்லவா முதலில் சொல்ல வேண்டும்! அதைச்
சொன்ன பிறகுதானே திரு ஜோசப் கட்டுரை எழுத
வேண்டும்! இதை மறைப்பது என்ன நியாயம்?

இந்து ஏட்டில் திரு ஜோசப் எழுதிய கட்டுரையின்
மீதான எதிர்வினையாக இதுவரை இரண்டு
கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றை வாசகர்கள்
படிக்குமாறு வேண்டுகிறேன்.

சிந்து சமவெளி
நாகரிக மக்கள்
பேசிய மொழி என்ன?
இன்ன மொழி என்று
உறுதியாகக் கூற இயலுமா?

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக