ஞாயிறு, 18 ஜூன், 2017

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற
வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி கொடுத்தது யார்?
-------------------------------------------------------------------------------------
மறைந்த பேராசிரியர் இளவரசு அவர்கள் சுமார்
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூல் எழுதினார்.
விடுதலைப்போரில் பாவேந்தர் என்பது
அந்நூலின் பெயர்.

சென்னையில் நடைபெற்ற அதன் வெளியீட்டு
விழாவுக்கு நான் சென்று இருந்தேன். மறைந்த
தமிழறிஞர் அரண முறுவல் அவர்கள்
இவ்விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்தான்
வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி வாங்கிக்
கொடுத்தார் என்ற  அந்நூலில் ஆதாரத்துடன்
எழுதி இருந்தார் பேராசிரியர்  இளவரசு.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னும்
நெடிய வலைப்பின்னலில் பாவேந்தர் ஒரு
கண்ணியாக இருந்தார் என்பது வரலாறு.

வாஞ்சிநாதன் மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராளி என்பதே மார்க்சிய மதிப்பீடு.ஆனால்
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய தாசர்கள் முற்றிலும்
கற்பனையானதும் கீழ்மையானதுமான
அவதூறை வாஞ்சிநாதன் மீது வீசுவது
ஏற்கத் தக்கதன்று.
*******************************************************

paaventhar appothu pirenju

பாவேந்தர் அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு
உட்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்தவர். வாஞ்சியிடம்
பணம் ஏது? அவரால் சொந்தமாக ஒரு துப்பாக்கி
வாங்க இயலாது. எனவேதான் அவர் பாவேந்தரிடம்
இருந்து துப்பாக்கி பெற்றார். இது கட்டுக்கதை அல்ல.
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற  சங்கிலியில்
பாவேந்தரும் ஒரு கண்ணியாக இருந்தார்
என்பதை மறுக்க இயலாது.
**
பாவேந்தரை  திராவிட இயக்கக் கவிஞர் என்று
மட்டுமே பார்ப்பதால் வரும் அவநம்பிக்கை இது.
அவரை  பாரதியாரின் தொடர்ச்சியாகவும், பாரதியின்
தேசப்பற்றை   சுவீகரித்துக் கொண்டவராகவும்
பார்க்க வேண்டும்..  

துரதிருஷ்ட வசமாக அந்தப் புத்தகத்தை நான்
தொலைத்து விட்டேன். புத்தகம் எழுதிய
இளவரசு அவர்களும் அரணமுறுவல் அவர்களும்
இன்று உயிருடன் இல்லை. நமது வரலாறு
 முழுமையாகவோ சரியாகவோ எழுதப் படவே
இல்லை என்ற உண்மையின் பின்னணியில் இதைப்
பார்க்க வேண்டும். மேலும் ஆதாரம் கிடைக்குமானால்
சொல்கிறேன்.

மேம்போக்கான குட்டி  முதலாளித்துவ நுனிப்புல்
பார்வைக்கு அப்பால் பார்க்க இயலாதவர்கள்
வாஞ்சிநாதனை மதவெறியனாக மட்டுமே பார்க்க
இயலும்.  வாஞ்சி ஒரு மகத்தான ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராளி என்பது மார்க்சிய மதிப்பீடு.
ஒரு  நூற்றாண்டுக்கு முந்திய சமூக இயக்கம்
எப்படியிருந்தது என்பது பற்றிய பார்வை இல்லாமல்,
இன்றைய 2017இன் சட்டகத்தில் வாஞ்சியைப்
பொருத்துவது பேதைமை.

ரத்தத்திலும் DNAவிலும் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியத்தின்
தாசானுதாசனாக இருப்பவர்களால் மட்டுமே,
ஆஷ் துரை மீது பரிவு காட்ட இயலும். கோபாலகிருஷ்ண
நாயுடுவை படுகொலை செய்த மார்க்சிஸ்ட்
லெனினிஸ்டுகள் அவர் இரவில் தனியே
வரும்போதுதான் கொலை செய்தார்கள்.


வாஞ்சிநாதனின் தியாகத்தை கொச்சைப்
படுத்த முடியும். பிரிட்டிஷ் ஆட்சி நீடிக்க வேண்டும்
என்ற நிலைப்பாட்டை


இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக
ஆஷ் படுகொலை நடந்தபோது, வாஞ்சிநாதன்
இளைஞர்.(இருபதுகளில் இருந்தார்). அதற்கு முன்பு
பள்ளியில் படிக்கும்போதே, வாத்தியாரை அவர்
ஏன் கொலை செய்யவில்லை, அவருக்கு முன் அனுபவம்
ஏன் இல்லை என்று கேள்வி கேட்டால் யாரிடமும்
பதில் .இருக்காது.   

நக்சல்பாரி இயக்கத்தின் பிதாமகர் சாரு மஜூம்தார்

ஏகாதிபத்திய ஆதரவு ஏகாதிபத்திய எதிர்ப்பு
என்று இரண்டு முகாம்களாக சமூகம் பிளவுபட்டு
இருக்கும்போது, ஏகாதிபத்தியத்தை  எதிர்த்தவர்கள்
மட்டுமே நம் கவனிப்புக்கும் மரியாதைக்கும்
உரியவர்கள். வாஞ்சிநாதனைப் பற்றி ஏகாதிபத்திய
சார்புநிலை எடுத்தவர்களின் அபிப்பிராயம்
கணக்கில் கொள்ளத் தக்கதல்ல.


வாஞ்சிநாதன் ஒரு கோட்பாட்டாளர் (Theoretician) அல்ல.
அவர் ஆயுதம் தாங்கிய ஒரு படைக்குழுவின்
உறுப்பினர். (member or commander of the armed squad)
மேற்கொண்ட செயலைச் சிறப்பாகச்
செய்து முடித்தவர். அதற்காக தம் உயிரையும்
இழக்கச் சித்தமாக இருந்தவர். சமூகம் பற்றிய
அவரின் கருத்துக்கள் என்னவாக இருந்தன என்று
ஆராய்ச்சி செய்தால், அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு
என்னும் கடமையில் அவர் உறுதியாக இருந்தாரா
இல்லையா என்பது மட்டுமே அவரை அளக்கும்
ஒரே காரணி.

ஹிட்லர் அதிகாரத்தில் இருந்தவர். வாஞ்சிநாதன்
அதிகாரத்தை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தவர்.
இருவரையும் ஒப்பிடுவது மனச்சிதைவுக்கு
இலக்கானால்தான் முடியும்.

இதெல்லாம் பொய்யான  கட்டுக்கதை என்பதை
ஆயிரம் முறை .நிரூபித்து இருக்கிறேன்.


கொலை என்பதில் எவ்வித இழிவும் இல்லை.
வாஞ்சிநாதன் ஆஸ்துரையைக் கொன்றதும்
கூலிக்காக ராஜீவைக் கொன்றதும் ஒப்பிடத்
தக்கன அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக