வெள்ளி, 30 ஜூன், 2017

இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளின்
(BJP Cong CPM) படைப்பு GST.
அதை ஏனைய ஆளும் வர்க்கக்
கட்சிகளான மாநிலக் கட்சிகள்
அனைத்தும் ஆதரித்தன.  


GST என்பது இந்திய மக்களின் தேவை அல்ல.
மாறாக இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவை.
எனவே நாடாளுமன்றத்தில் GST எதிர்ப்பின்றி
நிறைவேறியது. தேசியக் கட்சிகளும் மாநிலக்
கட்சிகளும் GSTயை போட்டிபோட்டுக் கொண்டு
ஆதரித்தான். இன்று காட்டும் எதிர்ப்பு
போலியானது. மக்களை ஏமாற்றும் நோக்கம்
கொண்டது.

மாநிலங்களவையில் GSTயை
மார்க்சிஸ்ட்கள் ஏன் எதிர்த்து
வாக்களிக்கவில்லை?
யெச்சூரி ஆதரித்தது ஏன்?

GSTயை எதிர்த்து மாநிலங்களவையில்
காங்கிரஸ் வாக்களித்து இருந்தால்
GST புதைகுழிக்குப் போயிருக்குமே!
ஏன் காங்கிரஸ் செய்யவில்லை?


இந்த 2017இல் இந்தியா GSTக்கு தயாராக இல்லை.
It is highly PREMATURE.

இந்தியாவின் எல்லா மாநிலக் கட்சிகளும்
(முலாயம், மாயாவதி, மமதா, திமுக, அதிமுக
உட்பட) ஆளும் வர்க்கக் கட்சிகளே. இந்திய
ஆளும் வர்க்கம் = பெருமுதலாளித்துவம்)

GSTயை ஆதரித்து வாக்களிக்க முலாயம்சிங் யாதவ்
மற்றும் சிலருக்கு கையூட்டுப்பணம் வழங்கப்
பட்டது என்பதை அம்பலப் படுத்தி எழுதி இருந்தேன்.

இதை மோடிதான் கொண்டு வந்தார் என்று
நீங்கள் நினைத்தால் நீங்கள் பரிதாபத்திற்கு
உரியவர். இது BJP, Cong, CPM  கட்சிகளின் கூட்டுப்
படைப்பு.

  GST குறித்த எமது எல்லா வண்ணப் பதிவுகளையும்
படிக்கவும். அப்போதுதான் முழுச் சித்திரமும்
துலங்கக் .கிடைக்கும்.


1 கருத்து: