செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

 சாம்சங் புதிய மொபைல் அறிமுகம்!

ரூ 1 லட்சம் விலை!

----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------

சாம்சங் நிறுவனமானது சாம்சங் காலக்சி எஸ்-21 

என்ற பெயரில் முற்றிலும் புதிய ஒரு மொபைலை 

விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.


கடந்த ஜனவரி 14ல் (பொங்கலன்று) ஹைதராபாத்தில்

தெலுங்கு நடிகை சுர்பி புரானிக் (34-26-34, வயது 25)

இதன் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.


பிராண்டின் பெயர் : Samsung Galaxy S-21 series

இது அல்ட்ரா வகையைச் சேர்ந்தது. 5Gக்கானது.

இதன் விலை ரூ 70,000ல் தொடங்குகிறது. லட்சத்தைத் 

தாண்டுகிறது.


கார்த்திக் சிதம்பரம், கனிமொழி, உதயநிதி ஆகியோர் 

வாங்கக்  கூடிய மொபைல் இதுவாகும்.    


இதன் ஸ்பெக் குறித்து பக்கம் பக்கமாக எழுதப்பட்ட 

விவரங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்தில் 

மட்டுமே உள்ளன. இதையெல்லாம் தமிழில் எழுதுவார் 

எவரும் இல்லை. நான் தமிழில் எழுதத் தயார்.

ஆனால் எழுத மாட்டேன்.


ஏன்? இந்த ஒரு லட்ச ரூபாய் மொபைலை வாங்கப் 

போகிறவர்கள் யார்? அன்னக் காவடிகள் அல்ல.

அன்றாடங்காய்ச்சிகள் அல்ல. நடுத்தர வர்க்கம் அல்ல. 


பின் யார்? ஏற்கனவே கூறியபடி, கூத்தாடி சரத்குமார்,

கூத்தாடி உதயநிதி, கனிமொழி போன்றோர் வாங்கக் 

கூடிய மொபைல். அவர்களுக்கு தமிழில் விளக்கம் வேண்டும் 

என்று அவசியம் இல்லை.

************************************************** 

 


   

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக