ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

தனித் தமிழ்நாட்டை  அடைய முடியுமா?

--------------------------------------------------------------

இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலமாக இருந்துவரும் 

தமிழ்நாட்டை, இந்தியாவில் இருந்து பிரித்து, ஒரு 

தனி நாடாக ஆக்கி, இறையாண்மையுள்ள ஒரு 

தமிழ்தேசக் குடியரசாக அதை உருவாக்குவதே 

தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பதன் பொருள் ஆகும்.


இந்தக் கோரிக்கையை அடைய முடியுமா என்றால் 

ஒருபோதும் அடைய முடியாது என்பதுதான் சரியான 

ஒரே விடை. இந்தக் கேள்விக்கு unique solutionதான் 

உண்டே தவிர infinitely many solutions என்பது கிடையாது.


ஏன் அடைய முடியாது என்று சொல்லுகிறோம்? ஒரு 

வன்முறையான ஆயுதப் போராட்டம் இல்லாமல் 

தனித் தமிழ்நாடு பற்றிச் சிந்திக்கவே முடியாது.

வன்முறை என்றால் காவல்துறையின் சாதாரண

வன்முறை அல்ல. மாறாக பெருத்த வன்முறை 

ஆகும்.


இந்திய ராணுவத்தை வன்முறையாக ஆயுதங்களைக் 

கொண்டு எதிர்த்துப் போராட வேண்டும். இந்த

ஆயுதப் போராட்டத்தில், குறைந்தது பத்து லட்சம் 

பேர் உயிர்த்தியாகம் செய்ய நேரிடும். ஆயுதப் 

போராட்டத்தின் செயலாக்கத்தின்போது ஐம்பது லட்சம் 

பேர் வரை நமது தரப்பில் உயிரிழக்க நேரிடும்.


இன்றைய இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களைக் 

கொண்டுள்ள ராணுவம். Highly sophisticated weapons என்றும் 

strategic weapons என்றும் இந்திய ராணுவத்தின் ராணுவ 

நிபுணர்கள் வரையறுப்பார்கள். அண்மையில் இதே 

முகநூலில் அக்னி V என்ற BALLISTIC MISSILE பற்றி 

எழுதி இருந்தேனே, படித்தீர்களா? படித்திருக்கலாம்,

புரிந்ததா?


 50 லட்சம் பேர் செத்து, பல லட்சம் பேர் சிறையில் 

அடைக்கப்பட்டு தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கான 

ஆயுதப் போராட்டம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் 

பட்டு விடும். 


தமிழ்நாட்டில் உள்ள எட்டுக் கோடிப்பேரும் தனித் 

தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் அல்லர். 

இங்குள்ள திராவிடக் கசடுகள் அனைவரும் 

கங்காணிகளாக மாறி ஒவ்வொரு தமிழ்ப் போராளியையும் 

காட்டிக் கொடுப்பார்கள். அவர்கள் மட்டும்தான் 

காட்டிக் கொடுப்பார்களா? இல்லை.


தனித்தமிழ் ஈழத்திற்காகப் போராடினார் பிரபாகரன்.

வீரஞ்செறிந்த ஆயுதப் போராட்டம் அது ஆனால் ரத்த 

வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டது. துடைத்தெறியப் 

பட்டது. மலையகத் தமிழர்கள் தமிழ் ஈழப் போரில் 

சேர்க்கப் படவில்லை.


தமிழ் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் 

தமிழ் ஈழம் என்ற கோட்பாட்டை ஏற்கவில்லை. அவர்கள் 

சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப் 

புலிகளை சிங்க இனவெறி அரசுக்கு காட்டிக் 

கொடுத்தார்கள். இது விடுதலைப் போரில் பெரும் 

பின்னடைவை ஏற்படுத்தியது.


தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்னெடுத்து,

விடுதலைப் புலிகளைப் போல் ஓர் வீரஞ்செறிந்த 

ஆயுதப் போரை நடத்துவதாகக் கற்பனை செய்து 

பாருங்கள். தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் 

தனித்தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பார்களா?

ஒருபோதும் மாட்டார்கள். அவர்கள் இந்திய 

ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு தமிழ்ப் போராளிகளை

எதிர்த்து நிற்பார்கள்.


இன்னும் பல காரணங்கள் உண்டு. ஒவ்வொருவரும் 

சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெறுமனே தனித்தமிழ்நாடு 

என்று சுயஇன்பம் அனுபவித்துக் கொண்டு இருப்பதால் 

யாருக்கும் எந்தப் பயனும் விளையாது.


மூளை உள்ளவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தனித்தமிழ்நாடு என்றும் ஆயுதப் போராட்டம் 

மூலமாகவே அதை நடைமுறைப் படுத்த முடியும் என்றும்  

முடிவெடுத்துச் செயல்பட்ட, மறைந்த தமிழரசனின் 

இயக்கத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

--------------------------------------------------------------------  

      .          

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக