திங்கள், 15 ஜூலை, 2019

மேலும் அம்பலமாகும் முகிலனின் பித்தலாட்டங்கள்!
உண்மை அறியும் குழுவும் முகிலன் மீட்புக் குழுவும்
தமிழ்ச் சமூகத்துக்கு பதில் கூறியே ஆக வேண்டும்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
முகிலன் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்
ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி உள்ளன.
முகிலனின் தலைமறைவானது, பாலியல் குற்றம் புரிந்ததன்
காரணமாக, அவராகவே  ஏற்படுத்திக் கொண்ட
தலைமறைவு என்ற உண்மையை தமிழ்ச் சமூகம்
இப்போது நன்கறிந்து கொண்டது.

முகிலனை யாரோ கடத்தி விட்டார்கள் என்ற இழிந்த
பொய்யின் சாயம் வெளுத்து விட்டது. முகிலன் மீது தேசியப்
பாதுகாப்புச் சட்டமோ (NSA), உப்பா சட்டமோ (UAPA)  
அல்லது குண்டர் சட்டமோ ஏவப்படவில்லை என்பதை
அனைவரும் அறிவோம்.

ஸ்டெர்லைட் போன்ற பெரும் ஏகாதிபத்திய நிறுவனங்கள்
தங்களின் நலனுக்கு எதிரானவர்களை களையெடுப்பதை
ஒரு கலையாகவே பயின்றவர்கள்தான். ஆனால் அவர்கள்
அமைச்சர் மட்டத்திலோ அல்லது முதலமைச்சர்
மட்டத்திலோ, உயர் அதிகாரிகள் மட்டத்திலோ உள்ள
தடைகளை மட்டுமே eliminate செய்வார்கள். முகிலன் போன்ற
விளம்பர மோக உதிரிகளை அல்ல.

முகிலன் தலைமறைவானதும் அவரின் ஆதரவாளர்கள்
இரண்டு குழுக்களை அமைத்தனர்.
1) முகிலன் மீட்புக்குழு.  .
2) திரு அ மார்க்ஸ், அண்ணன் தியாகு ஆகியோர் அடங்கிய
உண்மை அறியும் குழு.

பாலியல் குற்றம் புரிந்ததன் காரணமாகவே முகிலன்
தலைமறைவானார் என்ற உண்மை முகிலனை
நன்கறிந்த பலருக்கு மார்ச் மாதத்திலேயே
தெரியும் என்ற செய்திகள் தற்போது வரத் தொடங்கி
உள்ளன.

போலியான தலைமறைவின்போது முகிலன் தமது
குடும்பத்தாருடன் தொலைபேசித் தொடர்பில் இருந்தார்
என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதில்
யார் யாரெல்லாம் உடந்தை என்ற செய்திகளும் வந்து
கொண்டுள்ளன. ஒருபுறம் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு
மனு (ஹேபியஸ் கார்ப்பஸ் மனு) போடுவதும், மறுபுறம்
முகிலனுடன் அலைபேசித் தொடர்பில் இருப்பதும்
எவ்வளவு இழிந்த செயல்கள்!

முகிலனின் குடும்பத்தாரும் அவரின் ஆதரவாளர்களும்
காவல்துறையை ஏமாற்றட்டும்; நீதிமன்றத்தை
ஏமாற்றட்டும். இவை குறித்து எனக்கு அக்கறை இல்லை.
ஆனால் ஒட்டு மொத்தத்  தமிழ்ச் சமூகத்தையும்
பொய் சொல்லி ஏமாற்றுவது என்றால் அது மன்னிக்க
முடியாத குற்றம்! அது பெருங்கயமை ஆகும்.

உண்மை அறியும் குழுவினரும் முகிலன் மீட்புக்
குழுவினரும் தமிழ்ச் சமூகத்திற்கு இதற்கெல்லாம்
பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தான் புரிந்த பாலியல் குற்றத்தில் இருந்து தப்பிக்கவே
முகிலன் தலைமறைவானார் என்ற உண்மையை
தமிழ்ச் சமூகத்துக்கு முதன் முதலில் நான்தான்
தெரிவித்தேன். இதன் விளைவாக இழிந்த அவதூறுகளையும்
கொலை மிரட்டல்களையும் சந்தித்தேன்.

சமூகத்தின் பொதுவெளியில், அச்சு ஊடகத்திலும்
மின்னணு ஊடகத்திலும் அவதூறுகளுக்கு
அஞ்சாமல் நான் முன்வைத்த உண்மைகளை இன்று
பலரும் ஏற்கத் தொடங்கி உள்ளனர். நான் சொன்னவற்றை
எந்த ஊடகமும் முதலில்  ஏற்கவில்லை. அதற்கான
அசைக்க முடியாத ஆதாரங்கள் (unassailable evidence)
என்னிடம் இருப்பதை அறிந்து தெளிந்த பின்னரே
ஊடகங்களில் நான் கூறியவை ஏற்கப்பட்டன.

இன்று முகிலன் தானாகவே தன் சுய விருப்பத்தின் பேரில்
தலைமறைவு ஆனார் (self exile) என்று நான் கூறிய
உண்மையை மொத்தத் தமிழ்ச் சமூகமும் ஏற்றுக்
கொண்டு விட்டது. நான் மேற்கொண்ட அம்பலப்
படுத்தல்கள் (exposures) தயங்கிக் கொண்டிருந்த
பலருக்கும் தைரியத்தை அளித்தன. அதன் விளைவாக
இன்று பலரும் என்னை வழிமொழியத் தொடங்கி
உள்ளனர். அவர்களை வரவேற்கிறேன்.

ஆனால் முதன் முதலில் இந்த உண்மையை நான்
கூறியபோது, 360 டிகிரியில் இருந்தும் என் மீது கல்
வீசப் பட்டது. காவேரி டிவியில் நான் பங்கேற்ற நிகழ்ச்சியின்
மீதான குட்டி முதலாளியவிடலைகளின் பின்னூட்டங்களைப்
பாருங்கள்.

ஜூலை 6ஆம் நாள் இரவு 10 மணிக்கு முகிலன்
திருப்பதியில் நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்
என்ற செய்தி கிடைத்தது.

மறுநாள் காலையிலும் மதியத்திலும் (07.07.22019)
முகிலனைத் தோலுரித்து இரண்டு முகநூல் பதிவுகளை
எழுதினேன். பெரும் அதிர்ச்சி மதிப்புடைய அப்பதிவுகள்
பெருமளவில் வாசகர்களையம் ஊடகத்தினரையும் சென்று
அடைந்தது.

மறுநாள் (08.08.2019) காவேரி டிவி (Cauvery News TV)
நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று முகிலனின்
பாலியல் பிறழ்வு நடத்தையை ஆதாரங்களுடன்
அம்பலப் படுத்தினேன்.

அன்றைய தினமே தமிழ் இந்து செய்தியாளருக்கு
நேர்காணல் அளித்தேன். அது தமிழ் இந்து ஏட்டில் 09.07.2019
வெளியானது. முகிலனின் பித்தலாட்டம் அம்பலமாகி
மொத்தத் தமிழ்நாடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

அதன் பிறகு இன்று வரை பல்வேறு ஊடகவியல்
நபர்களும் தொடர்பு கொண்டு என்னிடம் உண்மையை
உறுதிப் படுத்திக் கொண்டனர். ஒரு நாளுக்கு நாலைந்து
மணி நேரம் ஊடக அன்பர்களின் தொலைபேசி
அழைப்புக்கு பதில் கூறுவதிலேயே செலவானது.

மேலும் சில தொலைக்காட்சி சேனல்களுக்கு
நேர்காணல் கொடுத்துள்ளேன். அவை ஒவ்வொன்றாக
வெளிவர வர,  முகிலனின் அனைத்துப் பித்தலாட்டங்களும்
முழுவதுமாக அம்பலம் ஆகும். இந்த 140 நாட்களும்
முகிலன் எங்கிருந்தார், யார் யாருடன் பேசினார்
என்பதற்கெல்லாம் முகிலன் மீட்புக்குழு பதில்
சொல்லியே ஆக வேண்டும்.

உண்மை ஒருநாள் வெளியாகும்-அன்று
உள்ளங்கள் யாவும் தெளிவாகும்
பொறுமை ஒருநாள் புலியாகும்-அதற்குப் 
பொய்யும் புரட்டும் பலியாகும்.
...பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.....
--------------------------------------------------------------------------   
பின்குறிப்பு:
குட்டி முதலாளிய விடலைகள் எனக்கு கொலை
மிரட்டல் விடுத்துள்ளனர். எனக்கு சிரிப்பு வருகிறது.
இது annihilation நடந்த இடம் என்பது பாவம் அந்த
விடலைகளுக்குத் தெரியாது.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
******************************************************
மருதுபாண்டியன் திருப்பூர் குணா கே என் சிவராமன்

கிருஷ்ணசாமி தியாகராஜன்


நன்றி அம்மா. சாவித்திரி கண்ணன் அவர்களின்
பதிவு வரவேற்கத் தக்கது. சற்றுமுன் ஒரு பதிவு எழுதி
வெளியிட்டுள்ளேன். நான் தேங்காயை உடைத்தது
போலவும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும்
பாணியிலும் எழுதுவேன். சாவித்திரி கண்ணன்
போன்றவர்கள் " மாமன் அடிச்சானோ மல்லிகைப்புச்
செண்டாலே என்ற பாணியில் எழுதி சுற்றி வளைத்து
மூக்கைத் தொடுவார்கள். அது குட்டி முதலாளிய
பாணி. இருப்பினும் அது பாராட்டத் தக்கது.நன்றி அம்மா.

மருதுபாண்டியன் . 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக