ஞாயிறு, 7 ஜூலை, 2019

அடுத்த பிறவியிலும்!
---------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------
அடுத்த பிறவியிலும் இந்தியாவில்தான் பிறக்க
விரும்புகிறேன்!

அப்போதும் தமிழ்நாட்டில் ஒரு தமிழனாகப்
பிறக்கவே விரும்புகிறேன்.

தமிழனாகப் பிறந்தபின், திருநெல்வேலிக்காரனாக
நெல்லையில் பிறக்கவே நான் விரும்புகிறேன்!

நெல்லையிலும் வீரவநல்லூரில் பிறக்கவே விரும்புகிறேன்!

வீரவநல்லூரிலும் இப்போதைய என் குடும்பத்திலேயே
மீண்டும் பிறக்க விரும்புகிறேன்!
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இது இலக்கியப் பக்கமும் ஆகும்.
இதை ஏன் பின்குறிப்பாகச் சொல்ல நேர்கிறது?
இலக்கியத்தில் அடுத்த பிறவிகள் ஏற்கப் படுகின்றன
அறிவியலில் ஏற்கப் படாவிடினும்!
********************************************** 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக