திங்கள், 8 ஜூலை, 2019

ஒரு பெண்ணை அல்ல, பல பெண்களை
ஏமாற்றிச் சீரழித்தவர்தான் முகிலன்!
முகிலனை ஆதரித்து அவரின் குற்றங்களை
மூடி மறைப்பவர்கள் பெண்களுக்கு எதிரானவர்களே!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
தம் வாழ்நாள் முழுவதும் பிறழ்ந்த பாலியல் நடத்தை
உடையவராகவே இருந்தார் முகிலன். ஒரு கண நேர
சபலத்தில் பாலியல் குற்றவாளியாக மாறியவர்
அல்ல முகிலன். தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களை
திட்டமிட்டு இழைப்பவராகவே அவர் இருந்து வந்துள்ளார்.
அவரது வாழ்க்கையே இதற்கான சான்று.

தோழர் கார்முகில் தமது கட்சியின் சார்பில் ஒரு இளைஞர்
அமைப்பை நடத்தி வருகிறார். பு இ மு (புரட்சிகர இளைஞர்
முன்னணி) என்னும் அந்த அமைப்பில் முதலில் முகிலன்
செயல்பட்டு வந்தார். அனால் அந்த அமைப்பில் அவரால்
தொடர முடியவில்லையே, ஏன்?

தோழர் கார்முகில் கறாராக அமைப்பை நடத்தி வருபவர்.
பாலியல் பிறழ்வை சகித்துக் கொண்டு செல்லும்
தாராளவாதி (liberal) அல்ல அவர்.

பின்னர் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்
நடத்தும் சுப உதயகுமார் அவர்களிடம் தஞ்சம் அடைந்தார்
முகிலன். அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் தமக்கு அடுத்த
இடத்தை முகிலனுக்குக் கொடுத்து மிகவும் மதிப்புடன்
அவரை வைத்திருந்தார் உதயகுமார். ஆனால் அங்கும்
முகிலனால் தொடர முடியவில்லையே ஏன்?

அங்கு சக போராளியாக இருந்த ஒரு பெண்ணுடன்
முகிலனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கும்
இவருக்குமான காமரசம் சொட்டும் உரையாடல்
ஒரு ஆடியோ கேசட்டாக அப்போது வெளிவந்தது.
இதை ஒட்டி அந்த ஆடியோ கேசட்டில் இருந்த
அனைத்தையும் குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து உதயகுமாருக்கும் முகிலனுக்கும்
முரண்பாடு முற்றிய நிலையில் முகிலன் கூடங்குளம்
போராட்டத்தில் இருந்து விலகினார்.

அடுத்து மணல்கொள்ளை எதிர்ப்புப் போராட்டக்
களத்துக்கு வந்தார் முகிலன். அங்கும் அவரின்
வழக்கமான லீலை தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட
மாதேஸ்வரி என்ற பெண் முகிலனின் முறைகேட்டை
அம்பலப் படுத்தி நியாயம் கேட்டார் அப்பெண்.

இதையொட்டி ஒரு பஞ்சாயத்து நடந்தது. அதில்
முகிலனின் சகல பாலியல் முறைகேடுகளும்
பொதுவெளியில் அம்பலம் ஆயின. அனைவராலும்
முகிலன் கண்டிக்கப் பட்டார். முகிலனை வெளியேற்றி
இந்தப் பஞ்சாயத்தை முடித்து வைத்தார் தோழர் அரங்க
குணசேகரன். அவரிடம் கேளுங்கள், முகிலன்
எப்பேர்ப்பட்ட பாலியல் குற்றவாளி என்பதை
அடுக்கடுக்காக எடுத்து வைப்பார்.

அங்கிருந்து விரட்டப்பட்ட முகிலன் கரூர் குளித்தலை
பக்கம் வந்தார். காவிரியாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தில்
செயல்பட்டார். அப்போது அங்கு பணியாற்றிய சக
போராளியான ..................என்னும் பெண்ணுடன் தொடர்பு
ஏற்பட்டது. அந்தப் பெண் முகிலனால் பாலியல்
வன்கொடுமை செய்யப் பட்டார்.

இந்தப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம்
கெட்டப் போராடினர். அந்தப் பெண்ணின் சார்பாக
ஒரு பஞ்சாயத்து நடத்த முற்பட்டனர். பெப்ரவரி 16, 2019ல்
நடக்க இருந்தது அந்தப் பஞ்சாயத்து. அந்தப்
பஞ்சாயத்துக்கு வராமல் தப்பிக்கவே முகிலன்
அதற்கு முந்திய நாள் இரவு (பெப்ரவரி 15) தலைமறைவு
ஆனார். இந்தத் தலைமறைவு அவரின் சொந்தப்
பிரச்சினையைச் சந்திக்க இயலாமல் அவரே மேற்கொண்ட
சுயமான தலைமறைவு.

முகிலன் தலைமறைவாகச் சென்று விடுவது இது
முதல் முறையல்ல. இதற்கு முன்பு, பு இ மு அமைப்பில்
இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட சொந்த நெருக்கடி
காரணமாக, முகிலன் தலைமறைவு ஆனார். மாதக்
கணக்கில் தலைமறைவாக இருந்த அவரை, அவரின்
அமைப்பினர் ஒரு ஆன்மிகக் குழுவில் இருக்கும்போது
கண்டு பிடித்து கூட்டி வந்தனர்.

இந்த உண்மையை பு இ மு அமைப்பின் பொறுப்பாளர்
தோழர் மறைமலை ஈரோடு அவர்கள் பலமுறை
அம்பலப் படுத்தி உள்ளார்; முகநூலிலும் எழுதி
உள்ளார்.

ஆக, தமது பாலியல் பிறழ் நடத்தைகளால் அடிக்கடி
நெருக்கடிக்கு உள்ளாவதும், நெருக்கடியைத் தாங்க
முடியாமல் தலைமறைவாகி விடுவதும் முகிலனுக்கு
வாடிக்கையாக இருந்திருக்கிறது.

முகிலனின் இந்த வரலாற்றை அறியாமலும்,
பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பை அறியாமலும்
பல குட்டி முதலாளித்துவ ஆசாமிகள் முகிலனைக்
கண்மூடித் தனமாக ஆதரித்து வருகின்றனர். இது
முகிலனின் கயமையை மூடி மறைக்கவும்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்காமல்
தடுக்கவுமே பயன்படும்.

திரு எ மார்க்சும் அண்ணன் தியாகு அவர்களும்
முகிலனின் தலைமறைவு குறித்து, ஒரு உண்மை
அறியும் குழுவை அமைத்துள்ளனர். இந்தக் கட்டுரையில்
சொல்லப்பட்ட எல்லா உண்மைகளையும் அவர்கள்
அறிவார்கள். அவர்கள் இந்த உண்மைகளை வெளியிட
வேண்டும். இல்லையேல் இந்த உண்மைகளையும்
இன்னும் பல உண்மைகளையும் தோழர் அரங்க
குணசேகரன் வெளியிடுவார்; நானும் வெளியிட நேரும்.

பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அவதூறாகவும்
முகிலனின் பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவாகவும்
பேசுவோரும் எழுதுவோரும் கண்டிப்பாக மூன்றாண்டுச்
சிறை தண்டனை பெற நேரிடும் என்று எச்சரிக்கக்
கடமைப் பட்டவன் ஆகின்றேன்.
************************************************

நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம்
உறுதியாக நிற்கிறேன். முகிலனுக்கு உரிய
தண்டனையைப் பெற்றுத் தரப் போராடுவேன்.

மருதுபாண்டியன் சிலம்பரசன் சே

கிருஷ்ணசாமி தியாகராஜன்


முகிலன் எந்தப் புதிய ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
முகிலன் பெப்ரவரி 15ல் ஏற்பாடு செய்த press meetஆனது
மறுநாள் தன மீதான பஞ்சாயத்தில் இருந்து
அனைவரின் கவனத்தை திசைதிருப்பவே ஏற்பாடு
செய்யப் பட்டது. அந்த ஸ்டெர்லைட் வீடியோவை
தயாரித்தது வேறு இருவர்; முகிலன் அல்ல.
முகிலன் வெளியிடும் முன்பே அந்த வீடியோ அரசிடமும்
ஊடகத்தினரிடமும் இருந்த ஒன்றுதான்.

இது குறித்து எமது முந்திய பதிவைப் படிக்கவும்.
குட்டி முதலாளியம் தன அறியாமையை வெளிப்படுத்த
இது இடம் அல்ல.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக