சனி, 4 மார்ச், 2017

(11) எத்தனை அடி தோண்டப் போகிறார்கள்?
எவ்வளவு ஆழத்தில் கிணறு?
ஊதிப்பெருக்கப்படும் பொய்களும் உண்மையும்!
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
1) நெடுவாசலில் 12,000 அடி ஆழத்திற்கு கிணறு
தோண்டப்போவதாக ஒரு அரசியல்வாதி கூறியுள்ளார்.

2) 6000 மீட்டர் (கவனிக்கவும்: மீட்டர்) ஆழத்திற்கு
தோண்டப் போவதாக பலரும் எழுதி வருகின்றனர்.
6000 மீட்டர் என்றால் ஏறத்தாழ 20,000 அடி. (1 மீ =3 அடி)

3) இவை அனைத்தும் பொய்கள். பெரிதும் அறியாமை
நிரம்பி வழியும் பொய்கள்.

4) உலகிலேயே மிகப்பெரிய மிக ஆழமான தங்கச்
சுரங்கம் தென் ஆப்பிரிக்காவில் டவ் டோனா (Tau Tona)
என்ற இடத்தில் உள்ளது. இதன் ஆழம் 12,000 அடி மட்டுமே.

5) மீத்தேன் எடுப்பதற்கு தங்கச் சுரங்கத்தின்
ஆழத்தை விட அதிகம் தோண்ட வேண்டும் என்பது
பேதைமையுள் எல்லாம் பேதைமை.

6) பூமியில் அதிக ஆழம் தோண்டத் தோண்ட கனிமங்கள்
( தங்கம், வெள்ளி, தாமிரம்) கிடைக்கலாம். மீத்தேன்
கிடைக்காது.

7) நிலக்கரி, எண்ணெய், மீத்தேன் போன்றவை 4000 அடி
முதல் 5000 அடி ஆழத்திலேயே கிடைத்து விடும்.
தோண்டி எடுக்கப்படும் வாயுவைப் பொறுத்து,
தோண்ட வேண்டிய ஆழமும் மாறுபடும்.

8) இயற்கை வாயுவும் அது சார்ந்த மீத்தேனும் ஓரளவு
2000 அடி, 3000 அடி என்று குறைந்த ஆழத்திலேயே
கிடைக்கும். ஷேல் வாயுவுக்கு இன்னும் அதிக
ஆழம் தோண்ட வேண்டும்.

9) எப்படி ஆயினும் இருபதாயிரம் அடி தோண்ட
வேண்டிய தேவையே இல்லை. அப்படி 20,000 அடியில்தான்
எரிவாயு கிடைக்கும் என்றால், அதைத் தோண்டி
எடுக்க எந்த நிறுவனமும் முன்வராது.

10) போலி அறிவியல் கசடர்களை முறியடியுங்கள்.
***********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக