வெள்ளி, 17 மார்ச், 2017

அஞ்சலி!
----------------
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின்
பொருளாளர் தோழர் கு மனோகரன்
(வயது 78) அவர்கள்
நேற்று (16.03.2017) இரவு காலமானார்.
இன்று வெள்ளி நண்பகல் 12 மணி அளவில்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

வானகரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள
அவரின் இல்லத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளில்
நானும் தோழர்களும் பங்கேற்று அஞ்சலி
செலுத்தினோம்.

உடம்பில் ஆயிரம் நோய்களை வைத்துக் கொண்டு
ஒவ்வொரு வாசகர் வட்டக் கூட்டத்திலும்
மிகுந்த உற்சாகத்துடன் பங்கெடுத்து, அடுத்த
கூட்டம் பற்றிய அறிவிப்பை, ஒவ்வொரு முறையும்
தவறாமல் செய்து, வாழ்க்கையைமானுடம் பயனுற
வாழ்ந்த தோழர் மனோகரன். அவரின் மரணம்
நெஞ்சைப் பிசைகிறது. 

வாழ்வாங்கு வாழ்ந்த தோழர் மனோகரன் அவர்களுக்கு
எமது அஞ்சலி!
********************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக