திங்கள், 29 ஏப்ரல், 2019

தூத்துக்குடியில் ஆதிக்கம் செலுத்துவது ஸ்டெர்லைட் மட்டுமே!
--------------------------------------------------------------------------------------------------
1) தூத்துக்குடி தொகுதி முழுவதுமே ஸ்டெர்லைட்
மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது.

2) திமுகவின் கனிமொழியும் பாஜகவின் தமிழிசையும்
இருவருமே ஸ்டெர்லைட்டின் வேட்பாளர்களே.

3) திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட்டை
எதிர்த்து ஒரு வரி கூட இல்லை.

4) திமுக மாவட்டச் செயலாளர் மறைந்த பெரியசாமியும்
அவர் குடும்பமும் ஸ்டெர்லைட்டுக்குத் தேவையான
அனைத்து கான்டராக்டுகளையும் எடுத்துச் செய்கிறார்கள்.

5) ஸ்டெர்லைட்டே எதிர்த்து ஒரு பிட் நோட்டீஸ் கூட
அச்சடிக்க முடியாதபடி அச்சக உரிமையாளர்கள்
மிரட்டப் பட்டுள்ளனர்.

6) துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் புகைப்படத்தை
எந்த பிட் நோட்டிஸிலோ பேனரிலோ அச்சடிக்கத் தடை.

7) தூத்துக்குடி போலிஸ், கலெக்டரின் நிர்வாகம் உள்ளிட்ட
அனைத்து அரசு அமைப்புகளுமே ஸ்டெர்லைட்டின்
கைக்கூலிகளே.

8) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து யாரும்
பிரச்சாரம் பண்ண இயலாத நிலை இருந்தது.

9) திமுக அதிமுக கம்யூனிஸ்டுகள் பாஜக காங்கிரஸ்
என்று எந்த ஒரு கட்சியும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை
எதிர்க்கவில்லை. இதுதான் தூத்துக்குடி நிலைமை.

10) இந்நிலையில் திமுகவை ஆதரித்தால் ஸ்டெர்லைட்டை
மூடலாம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும், செய்த
கயவர்களை என்ன செய்யலாம்?
****************************************************


 

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக