வெள்ளி, 5 ஏப்ரல், 2019

திரு ஜான் ரூபர்ட் அவர்களுக்கு,

1) இது காங்கிரஸ் எதிர்ப்புப் பதிவல்ல.
இது மார்க்சிய லெனினியக் கட்சி ஒன்றின் தலைவர்
தோழர் கார்முகில் அவர்களின் நிலைபாடு குறித்த பதிவு.

2) எமது முகநூல் பக்கம் நடுநிலையானது அல்ல.
அது முற்றிலும் ஒருபக்கச் சார்பு கொண்டது
(highly biased). எனவே காங்கிரசை ஆதரித்து 10 பதிவும்
பாஜகவை ஆதரித்து 10 பதிவும் வெளியிட வேண்டிய
தேவை எமக்கில்லை.

3) கல்வித்தந்தை ஜகத் ரட்சகன் இலங்கையில் ரூ 25000
கோடி முதலீடு செய்துள்ளது உண்மை என்று நாங்கள்
கூறுகிறோம். அவதூறு வழக்குப் போட  விரும்பினால்
நீங்கள் தாராளமாக வழக்குப் போடலாம்.

4) கல்வித்தந்தை ஜகத் ரட்சகன் மாணவர்களிடம்
அடித்து வரும் கொள்ளை பற்றியும், ஆசிரியர்களுக்கு
குறைந்த சம்பளம் கொடுத்து சுரண்டுவது பற்றியும்
கவலைப்படாமல், அவருக்கு வக்காலத்து வாங்குவது
சமூக விரோதச் செயல்.

5) பெண்களுக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறையில்
ஈடுபடும் கயவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கு
இங்கு அனுமதி இல்லை. முகிலன் மீது தற்போது
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வழக்குத்
தொடர்ந்த்துள்ளார். இதையொட்டி பாதிக்கப்பட்ட
அந்தப் பெண்ணின் பெயரையோ, அப்பெண் பற்றிய
விவரங்களையோ வெளியிட அனுமதி இல்லை.
வெளியிடக்கூடாது என்று அந்தப்பெண் தெரிவித்து
உள்ளார். காவல்துறை DGPயும் அப்படி உத்தரவு
பிறப்பித்துள்ளார். இதற்கு மேலும் பாதிக்கப்பட்ட
பெண்னின் விவரங்களை வெளியிட வேண்டும்
என்று கேட்பது கிரிமினல் குற்றம் ஆகும்.

6) எதிரியை வெறுக்கக் கற்றுக்கொள் என்றார் மாவோ.
சீனப் புரட்சியில் இது பாலபாடம். யாரை எல்லாம்
வெறுக்கிறோமோ அவர்களுக்கு எல்லாம் எதிராக
வெற்றுப் பதிவுகள் போட முடியாது. ஏதாவது
ஆதாரம் கிடைத்தால்தான் பதிவு போட முடியும்.

7) தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையில் நீண்ட
காலமாக இருந்து வந்த TNML தற்போது தேர்தலில்
காங்கிரசை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்து
இருக்கிறது. ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி
எடுத்துள்ள மிகப்பெரிய நிலைபாட்டு மாற்றம்
(paradigm shift). இது குறித்து கேள்வி எழுப்ப
மார்க்சிய லெனினிஸ்டுகளுக்கு உரிமை உண்டு.
பதிலளிக்கும் கடமை தோழர் கார்முகிலுக்கு உண்டு.
இதில் காங்கிரஸ் ஆதரவு எடுபிடிகளுக்கு வேலை இல்லை.

8) NPD என்றெல்லாம் எழுதுவது பார்ப்பனியத் திமிர்.
ஒரு புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவ ஆசாமி
முகநூலில் ஒரு பதிவு போட்டு விட்டால், அது பெரும்
புரட்சி என்று நினைத்துக் கொள்வதுதான் நார்சிசம்.

9) தோழர் கார்முகிலுக்கு காங்கிரஸ் ஆசாமிகள்
வக்காலத்து வாங்க வேண்டிய தேவை இல்லை.
காங்கிரஸ் ஆசாமிகள் தமக்கு வக்காலத்து வாங்குவதைக்
கண்டு தோழர் கார்முகில் அருவருப்படைவார்.
அவருடைய நிலைபாட்டுக்கு உரிய நியாயங்களை
அவர் விளக்குவார். காங்கிரஸ்காரர்கள் அவருக்காக
வாதாட வேண்டிய தேவை இல்லை.

10) தோழர் கார்முகிலுக்கு வக்காலத்து வாங்கும்
குட்டி முதலாளித்துவ ஆசாமிகளே, தோழர் கார்முகிலின்
ஏதாவது ஒரு புகைப்படம் பொதுவெளியில் கிடைக்கிறதா
என்று பாருங்கள். கிடைக்காது. ஏன் கிடைக்காது
என்பதற்கு விடை தேடுங்கள். அதற்கு விடை கிடைக்க
உங்களுக்கு 10 ஆண்டுகள்  ஆகும்.

11) கியூ பிராஞ்சுக்கு தகவல் அளிக்கும் நோக்கில்
கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்
பட மாட்டாது. இதுவே கடைசி பதில்.
------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக