திங்கள், 3 டிசம்பர், 2018

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்
என்பது போல், களப்பணியில் தொடர்ந்து
ஈடுபட்டுவரும் அரங்க குணசேகரன்  பேசுவது
நியாயமல்ல. தோழர் ஏ எம் கே நினைவேந்தல்
கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நினைவேந்தல் உரையாற்றியவர்களும்
பார்வையாளர்களும்  தோழர் ஏ எம் கே பற்றி
நன்கறிந்தவர்கள்; பலர் அவருடன் நெருங்கிப்
பழகியவர்கள். அனைவரும் தங்களின்
போற்றுதலுக்குரிய தலைவருக்கு சிறப்பாக
செவ்வணக்க அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்திற்குத் தலைமையேற்ற நான் கூட்டத்தின்
சிறப்பு பற்றிக் கூறுவது தற்புகழ்ச்சியாக அமையும்.
நீங்கள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களைக்
கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

புலவர் கலியபெருமாளின் இளைய மகன்
தோழர் நம்பியார் கூட்டத்திற்கு வருகை
தந்தார். அவரை மேடையில் அமர வைத்து
நினைவேந்தல் உரையாற்ற அழைத்தேன்.
அவரின் பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதும் 
அவர் கூட்டத்திற்கு வருவார் என்பதும்
எனக்கு முன்னமே தெரியாது.

அருள்கூர்ந்து தோழர்கள் தியாகு, டி எஸ் எஸ் மணி, பி அண்ட் சி
நடராசன், VMS, சங்கரசுப்பு, இல கோவிந்தசாமியின்
புதல்வி மஞ்சுளா ஆகியோரிடம் கூட்டத்தைப்
பற்றிக் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.எல்லா
நக்சல்பாரி அமைப்புகளில் இருந்தும் அணிகள்
ஆதரவாளர்கள் பங்கேற்று தோழர் ஏ எம் கே
அவர்களுக்கு செவ்வணக்க அஞ்சலி செலுத்தினர்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக