வியாழன், 2 ஜூலை, 2020

சீனப் பொருட்களுக்கு இந்தியாவில் தடை!
------------------------------------------------------------------
1) 59 சீன ஆப்கள் (Apps) இந்தியாவில் தடை செய்யப்
பட்டன. இந்தத் தடை செயல்பாட்டுக்கு வந்து விட்டது.
குறிப்பாக டிக்டாக் ஆப் தடை செய்யப் பட்டதுமே
புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவம்
வெயிலில் பட்ட புழு போலச் சுருண்டு விட்டது. 

2) BSNL, MTNL ஆகிய அரசின் தொலைதொடர்பு 
நிறுவனங்கள் சீனாவின் நிறுவனங்களுடன் ஏற்கனவே
செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்களை ரத்து
செய்யுமாறு உத்தரவிட்டது மத்திய அரசு.
அதன்படி, 4G upgradation சார்ந்த சீன நிறுவனங்களுடன்
செய்து கொண்ட ஒப்பந்தங்களை BSNL இன்று ரத்து
செய்தது.

3) இதே போன்று சீனாவுடன் ரயில்வே செய்து கொண்ட
ஒப்பந்தங்களும் ரத்தாகின்றன. அரசு இதற்கான
உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

4) இதனால் சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரும்
நஷ்டத்தை அடைகிறது. சீனாவுக்கு பெரும் நஷ்டம்
ஏற்படுவதாக சீன ஏடு குளோபல் டைம்ஸ் எழுதி உள்ளது.

5) வினவு இணைய தளத்தில் சீன ஆதரவாளர்களான 
மகஇக முட்டாள்கள் சீனாவை ஆதரித்து எழுதிய
கட்டுரையும்,வெங்கடேஷ் ஆத்ரேயா
(போலி மார்க்சிஸ்ட் கட்சி) எழுதிய கட்டுரையும்
முட்டாள்தனமாக எழுதப் பட்டவை என்பது
நிரூபணம் ஆனது.

6) ஏகாதிபத்திய சீனாவை
ஆக்கிரமிப்பு சீனாவை
பாசிச சீனாவை
ஆதரிக்கும் இழிந்த சக்திகளை முறியடிப்போம்.
******************************************************* 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக