புதன், 1 ஜூலை, 2020

மார்க்சிய அரசியலில் இல்லாத, மார்க்சிய
அமைப்புகளில் உறுப்பினராக இல்லாத அல்லது
அவ்வமைப்புகளின் தொடர்பில் இல்லாத ஒருவர்
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம்.
அதை நாம் ஆட்சேபிக்கப் போவதில்லை.

இந்தக் கட்டுரையில் கூட, மார்க்சிஸ்ட் ஆட்களின்
தொடர்பு எடுத்துக் காட்டப்பட்டு, அவர்களின் மீதான
நடவடிக்கை மட்டுமே கோரப் படுகிறது. புழுவினும்
இழிந்த தமிழச்சி மீதோ அல்லது பு இ லூலு மீதோ
நாம் நடவடிக்கை எதையும் கோரவில்லை.

சகல விதமான பாலியல் வித்தைகளும் (வக்கிரமானவை
உட்பட)  அமெரிக்காவில் உண்டு. ஆனால் அமெரிக்க மக்கள்
தங்கள் ஜனாதிபதியாக இருப்பவர்
யோக்கியமான குடும்பஸ்தராக இருக்க வேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்கள். இதை இந்த உலகறியும். 

மார்க்சிஸ்ட்களைப் பொறுத்த மட்டில் அவர்களின்
பாலியல் நடத்தை சமூகம் அங்கீகரித்ததாக மட்டுமே
இருக்க வேண்டும்; இருக்க முடியும். ஸ்திரி லோலனை
மார்க்சிஸ்டாக தமிழ்ச் சமூகம் ஏற்காது. மார்க்சிஸ்டுகளின்
பாலியல் நடத்தை வர்க்கப் போராட்டத்தின்
நலன்களுக்கு உட்பட்டதாக மட்டுமே இருக்க முடியும்.
விலகல்கள் (deviations)  ஏற்கப் படமாட்டா. எனவே
மார்க்சிஸ்டுகளுக்கு பாலியல் சலுகைகள் எதையும்
வழங்க முடியாது.


மார்க்சிஸ்ட்டாக இருந்தால் யோக்கியவானாக
இருக்க வேண்டும். காமாந்தகாரக் கழிசடை
எப்படி ஒரு மார்க்சிஸ்ட்டாக இருக்க முடியும்?

சீனிவாச ராவைப் பார்! ஜீவானந்தம் அவர்களைப் பார்!
இன்றைக்கும் நல்லகண்ணுவைப் பார்! ஈ எம் எஸ்
நம்பூதிரிபாட் அவர்களைப் பார்.   

 

ஒக்க மட்ட ஒக்க பாணமு
ஒக்க பத்னீ விரதுடே மனஸா
என்கிறார் தியாகையர். இது ஒரு தியாகராஜ
கீர்த்தனை.

ராமனுக்கு ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்பது
இக்கீர்த்தனையின் பொருள். அதாவது
பல்லவியின் பொருள்.

ராமன் ஏக பத்தினி விரதன் என்பது இந்திய
மக்களின் மனத்தில் பதிந்து விட்ட ஒன்று.
இந்துக்களிடையே பலதார மணம் தடை
செய்யப்பட்ட ஒன்று. சட்டம் தடை செய்கிறது.


சித்தர்கள் காலத்தால் பிந்தியவர்கள். ஒரு சில
நூற்றாண்டுகளின் வரலாறு மட்டுமே உடையவர்கள்.
இந்தியாவின் எழுதப்பட்ட அறிவியல் கிமு காலத்தது.
3000 ஆண்டுகளுக்கு முந்திய அறிவியலுடன்
300 ஆண்டுகளுக்கு மட்டுமே முந்திய சித்தர்களுக்கு
என்ன தொடர்பு இருக்க முடியும்?

Integral calculus, லாப்லேஸ் transform, ஃபூரியர் transform
ஆகியவை பற்றி கணிதம் பயின்றோர் அறிவர்.
இவை அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன.
இதைத்தான் நானும் நீங்களும் படித்தோம்.
இவையெல்லாம் தமிழிலா உள்ளன? தமிழிலா
கற்றுக் கொடுக்கிறார்கள்?

இன்றைக்கு அறிவியல் எப்படி ஆங்கிலத்தில் உள்ளதோ
அது போல, அன்று அறிவியலானது சமஸ்கிருதத்தில்
இருந்தது. ஏன்? எது உற்பத்தி மொழியோ அதில்தான்
அறிவியல் இருக்கும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு என்னவெனில்,
யார் எவருக்கும் உற்பத்தி மொழி என்றால் என்ன என்றே
தெரியாது. உற்பத்தி மொழி என்ற மார்க்சியக்
கோட்பாட்டை நான்தான் உருவாக்கிப் பரப்பி
வருகிறேன்.

சித்தர்கள் ஆன்மிகத்தை எழுதினார்கள் என்று
கூறுகிறீர்கள். நல்லது. இங்கு அறிவியலைப் பற்றி
மட்டுமே பேசுகிறோம், ஆன்மிகத்தை அல்ல.
அறிவியல்தான் உற்பத்தியில் பயன்படும்.
ஆன்மிகம் உற்பத்திக்குப் பயன்படாது.




காலம் எப்படித் தெரியாமல் போகும்?
ஏன் காலத்தைக் கணிக்கவில்லை?
அதை விட வேறு வேலை என்ன?

இன்றை க்கு ரேடியோ கார்பன் டேட்டிங் வந்து விட்டது.
வில்லார்டு லிபி வந்து விட்டார். அவர்தான் ரேடியோ
கார்பன் டேட்டிங்கைக் கண்டுபிடித்தவர்.
அதற்காக நோபல் பரிசு பெற்றவர்.

அகத்தியர் பெயரில் பிற்காலத்தில் எழுதிக்
கொண்டார்கள்.அப்படி எழுதியதிலும் உருப்படியாக
எதுவும் இல்லை. அது போன்றதே போகர் பாடல்கள்.



   
 
   

  என்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.


  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக