செவ்வாய், 21 ஜூலை, 2020


பிருந்தாவன விதவைகளும் SOC விதவைகளும்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
ஆண்டு 2002. திருபாய் அம்பானி செத்துப் போனார்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சொத்துத்
தகராறு! அடித்துக் கொண்டனர் முகேஷும் அனிலும்!
துடிதுடித்துப் போனார் ப சிதம்பரம். மத்தியஸ்தத்தில்
இறங்கினார்.

இன்று ஆண்டு 2020! அம்பானி குழுமத்தின் நியூஸ் 18
தொலைக்காட்சி, தன் ஊழியர்களில் சிலர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது! துடித்துப் போகிறார்
மருதையன்! பிரபல முன்னாள் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு!

மாதம் ரூ 4 லட்சம் சம்பளம் வாங்கும் குணசேகரன்
என்னும் நியூஸ் 18 ஊழியரிடம் இருந்து சில பொறுப்புகள்
நீக்கப் பட்டு இருக்கின்றன. துடித்துப் போகிறார் மருதையன்!
ஆர் எஸ் எஸ் பூச்சாண்டி காட்டி, அம்பானியின் கைக்கூலி
குணசேகரனை ஆதரிக்கச் சொல்கிறார் மருதையன்.
இந்த விவகாரத்தைப் பேசும்போது, மாதம் ரூ 4 லட்சம்
சம்பளம் வாங்குவதை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.

குணசேகரனோ அவரது கூட்டாளிகளோ மார்க்சிஸ்டுகள்
அல்லர். கேவலம் குட்டி முதலாளித்துவ அற்பர்கள்.
தனியுடைமைச் சிந்தனையில் இருந்து அணுவளவும்
விடுபடாதவர்கள். அவர்களை ஆதரிப்பதும் அம்பானியை
ஆதரிப்பதும் ஒன்றுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் நவீனா
என்ற சிறுமி செந்தில் என்ற கயவனால் உயிருடன்
எரித்துக் கொல்லப் பட்டாள். பத்ரி சேஷாத்ரி,
சிவகாமி ஐஏஎஸ் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு சிறுமி
நவீனா எரித்துக் கொல்லப்படக் காரணமாக இருந்த
கயவன் இந்த குணசேகரன். ஒரு கொலைகாரப் பாவியை
ஆதரிக்கச் சொல்லி அறைகூவல் விடுக்கிறார் மருதையன்!  

வீரமணி தலைமையில் இயங்கும் திகவின் லட்சம் கோடி
ரூபாய்  மதிப்புள்ள அறக்கட்டளையின் உறுப்பினராக
இருக்கும் கலி பூங்குன்றனின் மருமகன் இந்த
குணசேகரன்.

தமிழ்நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சி நடந்து, புதிய
ஜனநாயக அரசை அமைத்த பிறகு, பல லட்சம் கோடி
ரூபாய் மதிப்புள்ள திக அறக்கட்டளையின்
சொத்துக்களை தேசவுடைமை ஆக்க வேண்டி
இருக்கும் அல்லவா? அப்போது அதற்கு குணசேகரன்
ஆதரவு தருவாரா? அல்லது எதிர்ப்பாரா? நிச்சயம்
எதிர்த்துத்தான் நிற்பார்! அப்போது அவரை மக்கள்
மத்தியில் தூக்கில் இடுவதைத் தவிர புரட்சியாளர்களுக்கு
வேறு என்ன வாய்ப்பு இருக்கப் போகிறது?

எதிர்காலத்தில் தூக்கிலிடப் பட வேண்டிய ஒருவரை
இப்போது ஆதரிப்பதற்கு அப்படி என்ன புரட்சிகரமான
காரணங்கள் இருக்கின்றன மருதையன் அவர்களே!

வெளிப்படையாக சொல்லத்தக்க காரணம் எதுவும்
இதற்கு இல்லை என்பது மருதையனின் பலவீனம். ஆனால்
அதுவே நமது பலம்! மக்களின் பலம்!

இதுவரை கட்சியில் இருந்தார் மருதையன். அதுவும்
முழுநேர ஊழியராக இருந்தார். அதற்காக அவருக்கு
கட்சி சம்பளம்  வழங்கியது. அவருடைய தேவைகளைக்
குறைவின்றி கட்சி நிறைவேற்றி வைத்தது.

தற்போது மருதையன் கட்சியில் இல்லை. கட்சியில்
இருந்து விலகி விட்டார். அல்லது விலக்கப் பட்டு விட்டார்.
(SOCயில் செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும்
வேறுபாடு பார்க்க மாட்டார்கள்). கட்சியில் இருந்து
இனிமேல் அவருக்கு சம்பளம் எதுவும் கிடைக்காது.

அவரும் அவரின் துணைவியாருமாக இருவர் கொண்ட
குடும்பத்திற்கு குறைந்தது மாதம் ரூ 30,000 செலவாகும்.
(அவருக்கு மனைவியா? என்று கேட்டு யாரும் புருவத்தை
நெறிக்க வேண்டாம்! மணிவிழா வயதில் மணம் செய்து
கொண்டு கின்னஸ் சாதனை புரிந்தவர் மருதையன்).

நுகர்வை மறுக்கிற, சுகங்களை மறுக்கிற மனப்பான்மை
கொண்டவர்தான் மருதையன். என்றாலும் வீட்டு வாடகை,
மளிகைச் சாமான், காய்கறி, மருத்துவம் என்று குடித்தனம்
நடத்துவதற்கான மாதச் செலவு ரூ 30,000 ஆகிவிடும்.
இந்த ரூ 30,000ஐ சம்பாதிக்கும் உடல்நிலையோ
மனநிலையோ திறமையோ மருதையனிடம் தற்போது
கிடையாது. சாற்றைப் பிழிந்து கொண்ட பின்பு, சக்கையாக
வெளியே வீசப்பட்ட ஒருவரிடம் சம்பாத்தியம் பண்ணும்
சக்தியோ மனப்பாங்கோ கிடையாது. எனவே இந்தச்
சூழலில், கையறு நிலையில் உள்ள மருதையன்
தனது வாழ்நிலை சார்ந்து எடுக்கிற முடிவுகளை
விமர்சிக்க விரும்பவில்லை. கோடீஸ்வர குணசேகரனைச்
சார்ந்துதான் மருதையன் வாழவேண்டி இருக்குமென்றால்,
அது மருதையனின் குற்றம் அல்ல.

தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கத்தைத் தோற்றுவித்த
மூவரில் மூத்தவர் புலவர் கலிய பெருமாள். பல
ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாடத்திலோ
தருமபுரியிலோ அவர் காய்கறி விற்றுச் சம்பாதித்து
தன் வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருந்தது. அவர்
காய்கறி விற்கும் காட்சிகள் குமுதம் ஏட்டில் வெளியாயின.

SOCயில் இருந்து வெளியேற்றப் பட்ட துரை சண்முகத்தின்
நிலையும் இறங்காத தக்கதாகவே உள்ளது. பிருந்தாவன
விதவைகளின் வாழ்க்கை போன்றதுதான்
SOC விதவைகளின் வாழ்க்கையும்.

degeneration என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு.
உணவுப்பண்டங்கள் ஊசிப்போவதைக் கூட
degenerate ஆகிவிட்டன என்று சொல்லலாம். மருதையன்
போன்றவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே degenerate
ஆகி விட்டவர்கள். மருதையன் மட்டுமல்ல, SOC
அமைப்பும் DEGENERATE ஆகி ஆண்டுகள் ஓடிவிட்டன.

SOC is no more a Marxist Leninist party! It has turned into a radical
Dravidian party! So are its leaders and Marudhaiyan is no exception.
****************************************************************






குணசேகரன் என்ன லெனினா அல்லது
சே குவேராவா? IQ குன்றிய ஒரு குட்டி முதலாளித்துவ
எடுபிடியால் அம்பானியை எதிர்த்து என்ன செய்ய
முடியும்? கார்ப்பொரேட் ஊடகமான நியூஸ் 18ல்
குணசேகரனுக்கு அப்படி என்ன சுயேச்சையாகச்
செயல்படும் அதிகாரம் இருக்கிறது? ஒரு புண்ணாக்கும் 
கிடையாது. மருதையன் வீண் பிரமையில் மூழ்கிக்
கிடக்கிறார். குட்டி முதலாளித்துவ குணசேகரன்
மருதையனுக்கு சே குவராவாகத் தெரிகிறார். இது
எங்கு இட்டுச் செல்லுமெனில், நாளை தமிழக
உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவர் பதவிக்கு
மருதையன் போட்டி போடுவதில் போய் முடியும்.











  


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக