வியாழன், 10 செப்டம்பர், 2015

சிமிண்டு பெஞ்சில் உதிர்ந்து கிடக்கும் மல்லிகைப் பூக்களும்
முத்தழகியின் மூக்குத்தியும்!
-----------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------------------------------------
முத்தழகிக்கு பேதி
நிற்க மாட்டேன் என்கிறது
பீய்ச்சி அடிக்கிறது
**
அந்தச் சிறிய ஊரின்
ரயில் நிலைய சிமிண்டு பெஞ்சில்
37 மல்லிகைப் பூக்கள்
உதிர்ந்து கிடக்கின்றன.
**
யாக்ஞ வல்கியரைப் படித்தால்
பேதி நிற்கும் என்கிறார்  அறிஞர்-1
**
பேதி என்பதே ஒரு பெருங்கதையாடல்
என்கிறார் அறிஞர்-2
**
அறிஞர்-1 முன்புராதனத்துவ அறிஞர்
அறிஞர்-2 பின் நவீனத்துவ அறிஞர்
**
மிஷேல் ஃபூக்கோ
தனக்கு வந்த  எய்ட்ஸ் நோயை
மற்றவர்க்குப் பரிசளித்தது போல
முத்தழகியும்
தனக்கு வந்த பேதியை
எவருக்கும் தானம் கொடுத்து விடக்கூடும்
**
அபௌட் டர்ன் என்கிறார்
டிரில் மாஸ்டர்
**
முத்தழகி மூக்குத்தி அணிந்திருக்கிறாள்
ஒரு குறிப்பிட்ட கோணத்தில்
அவள் திரும்பும் போதெல்லாம்
டோட்டல் இன்டெர்னல் ரெஃப்லெக்ஷ ன் நிகழ்ந்து
மூக்குத்தி ஜொலிக்கிறது
 **
அந்த ரயில் நிலைய சிமிண்டு பெஞ்சில்
உதிர்ந்து கிடக்கும் மல்லிகைப் பூக்களின்
எண்ணிக்கை தற்போது 41.
*************************************************************             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக