புதன், 23 செப்டம்பர், 2015

இயற்பியல் ஆசிரியரை சமூகவியல் ஆசிரியர் பாராட்டுகிறார்!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------------------------------------
இயற்பியல் ஆசிரியராகவும் தற்போது அறிவியல் ஒளி என்னும் 
அறிவியல் ஏட்டின் ஆசிரியராகவும் இருந்து வரும் 
திரு நா சு சிதம்பரம் M.Sc, B.Ed அவர்களை 
அவர்தம் அறிவியல் பணிகளுக்காக 
ஆசிரியர் மானமிகு கி வீரமணி அவர்கள் 
பாராட்டி மரியாதை செய்கிறார். திரு சிதம்பரம் அவர்களுடன் 
மற்றும் இருவர் பாராட்டுப் பெறுகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------
இடம்: பெரியார் திடல்; நாள்: சனி 26.09.2015
----------------------------------------------------------------------------------------------------  
கடந்த ஆண்டு (2014) இதுபோல் நியூட்டன் அறிவியல் மன்றம் 
ஆற்றி வரும் அறிவியல் பணிகளுக்காக ஆசிரியர் மானமிகு 
வீரமணி அவர்கள், திடலில் நடைபெற்ற கூட்டத்தில், 
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர் தோழர் இளங்கோ 
அவர்களைப் பாராட்டி மரியாதை செய்தார். தோழர் இளங்கோ 
அவர்களுடன் தோழர் வே மதிமாறன், தோழர் சண்முகம் 
(கால்டுவெல் இலக்கணத்தைப் பதிப்பித்தவர்) ஆகியோரும் 
ஆசிரியரிடம் பாராட்டுப் பெற்றனர்.

அதற்கு முன்பு 2013ஆம் ஆண்டில், தோழர் சித்து முருகானந்தம் 
ஐன்ஸ்டின் அறிவியல் இயக்கம் அவர்கள் பாராட்டுப் பெற்றார்.
இவ்வாறு ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து அறிவியல் பணி 
ஆற்றி வருபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மரியாதை 
செய்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்ச் 
சமூகத்தில்  அறிவியலைப் போற்றுவதில் தொடர்ந்து 
முன்னிற்கும் தலைவர் ஆசிரியர் அவர்கள் மட்டுமே 
என்பது கருத்தில் கொள்ளத் தக்கது.
**************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக