வெள்ளி, 11 செப்டம்பர், 2015

கோரத்துக் கொப்போ கனவட்ட மம்மானை
கூறுவதுங் காவிரிக்கு வையையோ வம்மானை
ஆருக்கு வேம்பு நிகராகுமோ வம்மானை
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ வம்மானை
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ வம்மானை
வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ வம்மானை
ஊருக்கு உறந்தைநிகர் கொற்கையோ வம்மானை
ஒக்குமோ சோணாட்டுக்குப் பாண்டிநா டம்மானை.

--------------------------------------------------------------------------------
திருநெடு மாலவதாரஞ் சிறுபுலியோ வம்மானை
சிவன்முடி யிலேறுவதுஞ் செங்கதிரோ வம்மானை
ஒருமுனிவ னேரியிலோ வுரைதெளிந்த தம்மானை
ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ வம்மானை
கரையெதிரே டேறியது காவிரியோ வம்மானை
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ வம்மானை
பரவை படிந்துஞ் சோழன் பதந்தனிலோ வம்மானை
பாண்டியனார் பராக்கிரமம் பகரெளிதோவம்மானை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக