வியாழன், 25 ஜனவரி, 2018



1938ஆம் ஆண்டு இராசாசி ஆட்சிக் காலத்தில் ஆதிக்க இந்திமொழி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றவர் தந்தை பெரியார். அதே போல் 1948ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சிக்காலத்திலும் ஆதிக்க இந்திமொழியை எதிர்த்து மறியல்கள் பல பெரியாரால் #முன்னெடுக்கப்பட்டது.
1938இல் நடந்த போராட்டத்தையும், 1948இல் நடந்த போராட்டத்தையும் பொத்தாம் பொதுவாக இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொல்ல முடியாது. இவை இரண்டும் ஆட்சி மொழி இந்தி என்பதை எதிர்த்து நடந்தவை அல்ல. மாறாக பள்ளிகளில்
#கட்டாயப்_பாடமாக்கப்பட்டதை
எதிர்த்துத்தான் நடத்தப்பட்டவை.
பெரியார் #எதிர்த்ததெல்லாம் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என்பதைத் தான். இது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது.
ஆனால் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் என்பது சற்று மாறுபட்டது.
1965ஆம் ஆண்டு முதல் இந்திமொழியே இந்திய அரசின் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டமாகும். 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று தில்லிக்கு எதிராக முழக்கமிட்ட தந்தை பெரியார் அப்போது அறிவிக்கப்பட்ட இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து கூடுதலாக போராடியிருப்பார் என்று தான் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் உண்மையான வரலாறு அதுவல்ல.
அப்போது #அவர்_தில்லி_அரசின் கங்காணியாக செயல்பட்டார் என்பது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாகும்.
1965ஆம் ஆண்டு காமராசரால் அமர்த்தப்பட்ட பக்தவச்சல அரசின் காவல்துறையும், தில்லி அரசின் இராணுவமும் போராடிய முன்னூறுக்கும் மேற்பட்ட
#தமிழர்களை காக்கை குருவியை சுடுவது போல #சுட்டுக்_கொன்றது.
1938இல் நடந்ததைக் காட்டிலும் பொது மக்கள் ஆதரவோடு, தமிழக மாணவர்கள் மற்றும் தி.மு.க.வினரால் முன்னெடுக்கப் பட்ட போராட்டம் இதுவாகும். அப்போது பெரியார் நடத்திய 'விடுதலை' ஏடு பின் வருமாறு செய்திகள் வெளியிட்டது.
#இன்றும்_மாணவர்கள்_காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 16.1.1965
அண்ணாமலைப் பல்கலைக் கழக #மாணவர்களின்_அத்துமீறிய_வன்செயல் 28.1.1965
பொள்ளாட்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது.
#காலிகள்_மீது_சுட்டதில்
10 பேர் மாண்டனர் 13.2.1965.
தமிழ்நாட்டில் முதன்முறையாக தில்லி அரசின் இராணுவத்தை எதிர்த்து நடக்கும் வீரஞ்செறிந்த தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து துணை நிற்க வேண்டிய பெரியார் தனது 'விடுதலை' ஏடு மூலம் கெடுதலைச் செய்து கொண்டிருந்தார்.
'கிளர்ச்சிக்குத் தயாராவோம்' எனும் நூலில் பெரியார் #எழுதுகிறார்:
"இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம்... தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி?
யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?
ஆரம்பத்தில் நான்கு காலிகளைச்
#சுட்டு_இருந்தால்
இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? #முத்தம்_கொடுக்கவா_கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்"
தந்தை பெரியார் அரசாங்க வன்முறையை ஆதரித்ததற்கு காரணம் "காமராசர் ஆட்சி முக்கியம்" என்று அவர் கருதியதாக தவறான விளக்கம் இன்றும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக மாறக் கூடாது என்பது தான்
பெரியாரின் #உள்ளக்கிடக்கையாகும்.
3.3.1965 இல் '#என்னைப்பற்றி' எனும் தலைப்பில் விடுதலை ஏட்டிலே, "இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். தமிழ் கெட்டு விடும் என்பதால் அல்ல, தமிழ் கெடுவதற்குத் தமிழில் எதுவும் மீதி இல்லை. ஆங்கிலமே அரசியல் மொழியாக, வரலாற்று மொழியாக, அறிவியல் மொழியாக, சட்டமொழியாக ஆக வேண்டும் #என்பதற்காகவே இந்தியை எதிர்க்கிறேன்" என்று எழுதினார்.
1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் உயர்நிலைக் கல்வியில்
தமிழைப் பாடமொழியாக கொண்டு வருவதாக #அறிவித்தபோது
பெரியார் அதனை எதிர்த்துப் பேசியும் எழுதினார்.
தமிழ்ப் பாடமொழி திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி., பாரதிதாசன் போன்றவர்களை
"#தாய்ப்பால்_பைத்தியங்கள்" என்று கிண்டல் செய்தார்.
இதன் தொடர்ச்சியாகவே பெரியார் 1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தை அணுகினார் என்பது தான் உண்மையான காரணமே தவிர, காமராசர் ஆட்சி முக்கியம் என்பதெல்லாம் பொய்யான நொண்டிச் சமாதானங்களாகும்.
இன்றைய திராவிட இயக்கங்களின் ஆங்கில மொழி ஆதரவுக் கொள்கைக்கு மூல #முன்னோடியாகபெரியாரே இருந்துள்ளார் என்பதைத் தான் தமிழக மொழிப்போர் வரலாற்றை படிப்பதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக