வியாழன், 25 ஜனவரி, 2018

வெவ்வேறு நபர்கள்! ஒரே விளக்கம்!
தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும்!
-------------------------------------------------------------------------
1)  ஒரு தனியார் நிகழ்ச்சியில் காஞ்சி மட
இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர், தமிழ்த்தாய்
வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல்
அவமரியாதை செய்தார். இது தமிழ்நாடு
முழுவதும்  கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
2) இதேபோல ஒரு நிகழ்வு. அது அரசு நிகழ்ச்சி.
அது குடியரசு நாள் விழா(Republic Day, ஜனவரி 26).
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பங்கேற்ற நிகழ்வு.
அப்போது நாட்டின் துணை ஜனாதிபதியாக
இருந்த ஹமீது அன்சாரி. தேசியக் கொடி
ஏற்றும்போது, கொடிக்கு சல்யூட் அடிக்கவில்லை
என்பது நாடு முழுவதும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது.
3) தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, சங்கராச்சாரிகள்
எழுந்து நிற்பது மரபல்ல என்று சங்கர மடத்தின்
சார்பில் விளக்கம் கொடுக்கப் படுகிறது.
4) இதே போன்ற ஒரு விளக்கம், அதாவது துணை
ஜனாதிபதி சல்யூட்  அடிப்பது மரபல்ல என்ற
விளக்கம் ஹமீது அன்சாரி சார்பில் தரப்பட்டது.
5) மரபல்ல என்ற இருவரது விளக்கங்களும்
ஏற்கத் தக்கவை அல்ல. அவை சமாளிப்புகளே.
6) தாய்நாட்டையும் தாய்மொழியையும் விட,
தன் மதமே உயர்ந்தது என்று நினைப்பவர்கள்
மட்டுமே இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்தையும்
தேசிய கீதத்தையும் அவமதிக்க முடியும்.
7) இந்தப் போக்குகள் களையப் பட வேண்டும்.
தாய்நாட்டை தாய் மொழியை மதிப்போம்!
******************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக