வியாழன், 11 ஜனவரி, 2018

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின்
பொய்மைக்கு மறுப்பு!
---------------------------------------------------------------
நாடறிந்த நல்ல கவிஞர் வைரமுத்து தமிழ்
இலக்கியங்களைஆழ்ந்து கற்றவர். அவரின்
தமிழ்ப்பற்றை, தமிழ்ப் புலமையை எவரும்
குறைத்து மதிப்பிட இயலாது. என்றாலும்
வெளிநாட்டவர் ஒருவர் கூறிய, ஆண்டாளைப்
பற்றிய முற்றிலும் பொய்யான ஆதாரம்
எதுவுமற்ற ஓர் இழிந்த அவதூறை எழுதியதன்
மூலம் வைரமுத்து உப்பரிகையில் இருந்து
தரையில் விழுந்து விட்டார். தமது நிலையில்
இழிந்து விட்டார்.

எப்படியிருப்பினும் ஆண்டாளின் காலத்தை
எட்டாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாக
எவரும் வரையறுக்க இயலாது. ஆண்டாளின்
காலத்திய தமிழ்ச் சமூகம் மாபெரும் நிலவுடைமைச்
சமூகமாக (feudal society) உருவாகி இருக்கவில்லை.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
என்னும் ஐந்திணைகளில் மறுத்த நிலப் பகுதியில்
மட்டுமே வேளாண் உற்பத்தி பேரளவில்
இருந்தமையால் அங்கு மட்டுமே நிலவுடைமைச்
சமூகமும் அரசமைப்பும் இருந்தன. ஆண்டாள் வாழ்ந்த
சமூகம் முல்லை நிலைச் சமூகமாகும். இங்கு
பேரளவிலான நிலவுடைமைச் சமூகமோ அரசோ
இல்லை.

தேவதாசி முறை காலத்தால் பிந்தியது. ஆண்டாளின்
காலமான ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில்
நிலவுடைமைப் பெரும் பேரரசுகள் தோன்றி
நிலைபெற்று இருக்கவில்லை. நிலைபேறு உடைய
பெரும்  நிலவுடைமைப் பேரரசுகளே, வரலாற்றின் ஒரு
கட்டத்தில் தேவதாசி முறையை உருவாக்கின.
அதாவது ஆண்டாள் காலத்தில் தேவதாசி முறை இருந்திருக்கவில்லை.

வைரமுத்து கூறிய பொய்மைக்கு எவ்வித
அகச்சான்றோ புறச்சான்றோ இல்லை.
பரிசீலிக்கக்கூட அருகதையற்ற ஓர் இழிந்த
பொய்யை வைரமுத்துவின் சொந்த
மனச்சாட்சி ஒருபோதும் ஏற்காது. இருப்பினும்
அவர் அதைக் கூறுகிறார் என்றால் அதற்காக
அவர் பணம் வாங்கி இருக்க வேண்டும்.
சோழியன் குடுமி சும்மா ஆடாது. பணம்
வாங்காமல் வைரமுத்துவால்  இத்தகைய
இழிசெயலில் இறங்க இயலாது. இதுதான் உண்மை.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
 *************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக