செவ்வாய், 30 ஜனவரி, 2018

திருத்தங்கள்
-----------------------
எனினும் அத்வைதம் குறித்த ஓர் எளிய அறிமுகத்தைத்
தருவது என்னும் வரம்புக்குள்தான் இந்நூல் நிற்கிறது
என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.
----------------------------------------------
ஆதிசங்கரரின் பெயரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட
நூல்களை அவர்தான் எழுதினார் என்பது உண்மையல்ல.
பிரபலமாக உள்ள 'சௌந்தர்ய லஹரி'
ஆதிசங்கரர் எழுதியதல்ல என்பதை
அந்நூலின் மொழிநடையைக் கொண்டு
ஆய்வறிஞர்கள் நிரூபித்துள்ளனர்.
-----------------------------------------------------------------
ஆதிசங்கரரைப் பின்பற்றும் அத்வைதிகள்
ஸ்மார்த்தர்கள் எனப்பட்டனர். ஸ்ருதி, ஸ்மிருதி
என்னும் இரண்டும் இந்து மதத்தின் மூல ஆதாரங்கள்.
நான்கு வேதங்களே ஸ்ருதி. வேத விளக்கங்களே ஸ்மிருதி.
ஸ்மிருதி என்னும் சொல்லில் இருந்தே ஸ்மார்த்தம்
பிறந்தது. எனினும் ஸ்மார்த்தர்கள் என்ற அடையாளம்
மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லை. பார்ப்பன
சைவப் பிரிவினராகவே அத்வைதிகள் மக்களால்
அறியப் படுகின்றனர்.இதுவே அத்வைதம் சிறுத்துச்
சுருங்கிய வரலாறு.
--------------------------------------------------------------------------
இது மார்க்சியம் கூறும் சமூக அறம்.
ஒவ்வொருவரும் உழைத்து உண்ண வேண்டும்
என்பது மார்க்சியத்தின் தனிமனித அறம்.
--------------------------------------------------------------------------------------------.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக