செவ்வாய், 30 ஜனவரி, 2018

காரல் மார்க்ஸ்
----------------------------
கார்ல் மார்க்ஸ் மாணவராக இருந்த போது எழுதிய கவிதை
===== * =====
இரும்புக் கையுறையை வீசி எறிகிறேன்,
உலகின் அகன்ற முகத்தை அருவருப்பாகப் பார்க்கிறேன் !.
அரக்கி பூமிக்குள் ஓடுகிறாள்
என் மகிழ்ச்சியை நசுக்க முடியாது
அழிந்த நாட்டில் கடவுளைப் போல
வெற்றி முரசொலிக்க
நான் வருகிறேன் !.
ஒவ்வொரு சொல்லும்
செயல், நெருப்பு;
என் மார்பும் கடவுளைப்
போன்றதே !

---------------------------------------------------
பாடலின் பொருள் 
கடவுள் படைத்ததாக
சொல்லப்படும் இவ்வுலகு
அரக்கத்தனம் நிறைந்து
இன்று அறுவருப்பாக உள்ளது
அதன் அழிவிலிருந்து
புதிய உலகு படைக்க போகும்
கடவுளாக நான் வருகிறேன்
என்பதே பொருள்
இது
இளம் ஹெகலியரான மார்க்ஸ்
மக்களின் நம்பிக்கையை
அடிப்படையாக கொண்டு
தனது சமூக அக்கறையின்
போர் குணத்தில்
தன்னம்பிக்கையோடு
எழுதிய கவிதையே ஆகும்..

----------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக