வெள்ளி, 26 ஜனவரி, 2018

போக முடியாது. நாம் அனைவருமே பூமியின்
மேற்பரப்பில்தான் இருக்கிறோம். உலக
உருண்டையில் நமக்கு கீழ் உள்ள நாடு என்பதும்
பூமியின் மேற்பரப்பில்தான் உள்ளது. நீங்கள்
உங்கள் ஊரில் பூமியைத் தோண்டினால் பூமியின்
உள்ளகப் பகுதிக்குத்தான் (interior) போக முடியும்.
மேற்பரப்பில் உள்ள வேறு ஒரு நாட்டுக்குப் போக
முடியாது.தேங்காயின் மேற்பரப்பில் உள்ள ஒரு
எறும்பால் மேற்பரப்பிலேயே போய்த்தான்
வேறு ஒரு இடத்தை அடைய முடியும். அதற்கு
மாறாக, தேங்காயைத் துளைத்துக் கொண்டு
போனால் உள்ளே உள்ள இளநீரில் மூழ்கி
சாகத்தான் நேரிடும்.
**
பூமியின் மேல் துளையிட்டு எண்ணெய், எரிவாயு
இவற்றைத் தோண்டி எடுப்பவர்கள் ஒரு சில
கிலோமீட்டர் ஆழம்தான் தூண்டுவார்கள். அதற்கு
மேல் தோண்ட முடியாது. பூமியின் ஆரம் தோராயமாக
6300 கி.மீ/ இவ்வளவு ஆழத்திற்கு உலகில் யாருமே
தூண்டியது கிடையாது. பூமிக்கு கீழே ஆழம் செல்லச்
செல்ல வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.
எனவே பூமியைத் துளைத்துக் கொண்டு அடியாழம்
வரை சென்று மறுபக்கமாக வெளியே வருவது
என்பதெல்லாம் புராணக் கதையில்தான் சாத்தியம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக