புதன், 4 ஜனவரி, 2017

மிகப்பெரிய தீய சக்தியான சசிகலா!
-----------------------------------------------------------------------------
தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தியாக விளங்கிய
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவரால்
வளர்த்து ஆளாக்கப் பட்ட தீயசக்தியான சசிகலா
அதிமுகவின் தலைமைப் பொறுப்பை
ஏற்றுள்ளார். அதிமுக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக
இருப்பதால், தமிழகத்தின் தலைமைப் பொறுப்பையே
சசிகலா ஏற்றதாகத்தான் இதற்குப் பொருள்.

ராமச்சந்திர மேனன், வி என் ஜானகி, ஜெயலலிதா,
ஓ பன்னீர் செல்வம் ஆகிய முதல்வர்களும், மேனன்,
ஜெயலலிதா, சசிகலா என்று தொடரும் அதிமுகவின்
பொதுச்செயலாளர்களும் திராவிட இயக்கத்தின்
இருண்ட அத்தியாயங்கள்.

ஊரை அடித்து உலையில் போடுதல், அடுத்தவன்
சொத்தை  எழுதி வாங்குதல், கனிம வளங்களைக்
கொள்ளை அடித்தல், இயற்கையையும் சூழலையும்
நாசம் செய்தல், மிகுந்த திமிருடனும் அலட்சியத்துடனும்
ஊழல் செய்தல் ஆகியவற்றை ஒரு கலையாகப்
பயின்று செயல்படுத்தியவர் சசிகலா.

பாற்கடலைக் கடைந்தபோது அமுதமும் விஷமும்
வந்தது போல, தமிழ்ச் சமூகத்தை திராவிட இயக்கம்
கடைந்தபோது, பல்வேறு நன்மைகள் கிட்டின.
கூடவே மேனன், ஜானகி. ஜெயலலிதா, சசிகலா
என்று நச்சுப் பொருட்களும் கிடைத்துள்ளன.

சசிகலா என்ற ஆலகால விஷம் இன்று தமிழகத்தின்
தலைமைக்கு வந்திருப்பதற்கு திராவிட இயக்கமே
பொறுப்பு. இதை எவராலும் மறுக்க முடியாது. இதன்
காரணமாக திராவிட இயக்கம் இன்று குற்றவாளிக்
கூண்டில் நிற்கிறது.
********************************************************************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக