சனி, 28 ஜனவரி, 2017

நீட் தேர்வை சமஸ்கிருதத்தில் எழுத முடியுமா?
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
ஈரேழு பதினாலு லோகம் அழிந்தாலும், நீட் தேர்வை
சமஸ்கிருதத்தில் எழுத முடியாது.

அசாம் என்று ஒரு மாநிலம் இந்தியாவில் இருக்கிறது.
வடகிழக்கு மாநிலம் இது. இங்குள்ள பழங்குடியின
மொழி அசாமி. அசாம் மாநில மக்கள் இந்த
மொழியைப் பேசி வருகின்றனர். இங்கு
மக்கள்தொகை வெறும் மூன்று கோடிதான்.

என்றாலும் நீட் தேர்வை அசாமிய மொழியில் எழுத
மத்திய மோடி அரசு அனுமதித்து உள்ளது. ஆனால்,
சமஸ்கிருதத்தில் நீட் தேர்வை எழுத முடியாது.
அதற்கு மோடி அரசு அனுமதிக்கவில்லை.

ஏன்? இந்தியாவில் எந்த மாணவரும் சம்ஸ்கிருத
மீடியத்தில் அறிவியலைப் படிக்கவில்லை.
இந்தியாவின் எந்தப் பள்ளியிலும் பயிற்று மொழியாக
(medium of instruction) சமஸ்கிருதம் இல்லை.

வடஇந்தியாவில் பல்வேறு பல்கலைகளில் சமஸ்கிருதம்
கற்பிக்கப் படுகிறது. அதாவது மொழிப்பாடமாக.
ஆனால் எங்குமே சமஸ்கிருதம் பயிற்றுமொழியாக
இல்லை.  

குறைவான எண்ணிக்கையில் பேசப்படும்
அசாமி மொழி பயிற்றுமொழியாக இருக்கிறது.
இயற்பியலை வேதியியலை அசாமிய மொழியில்
மாணவர்கள் படிக்கிறார்கள்.
அசாமிய மொழியில் நீட் தேர்வை எழுதுகிறார்கள்.

ஆனால் சமஸ்கிருதத்தில் நீட் தேர்வை
எழுத முடியாது.
இதுதான் மெய்மை. இதுதான் உண்மை.

போலி சம்ஸ்கிருத அபிமானிகளும்,
சமஸ்கிருதப் பூச்சாண்டி காட்டுபவர்களும்
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு
ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது.
அதற்காகத்தான் இந்தப் பதிவு எழுதப் படுகிறது.
****************************************************************
பின்குறிப்பு: நீட் தேர்வுக்கு இன்னும் 99 நாட்களே உள்ளன.
தேர்வு மே 7, 2017 அன்று நடைபெறும்.
---------------------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக