சனி, 28 ஜனவரி, 2017

தனியார் சுயநிதிக் கல்லூரித் திமிங்கலங்கள்
நுழைவுத் தேர்வை அடியோடு விரும்பவில்லை.
அவர்களின் கல்லூரிகளில் மாணவர்களைச் 
சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு இடைஞ்சலாக இருந்தது.
எனவே அதை ரத்து செய்ய அரசிடம் கோரிக்கை வைத்து
வெற்றி பெற்றனர். இதுதான் நுழைவுத் தேர்வு ரத்தாவதற்கு
உண்மையான காரணம். ஆனால் இந்த உண்மையை
மறைத்து, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு என்ற
பொய்க்காரணம் கூறப்பட்டது.
**
உண்மையில் சுயநிதி முதலைகள், மாணவர்கள்
ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பொறியியல்
படிப்பில் சேர முடியும்
என்ற நிபந்தனையை விரும்பவில்லை. ப்ளஸ் டூவில்
தோல்வி அடைந்தவர்களையும் பொறியியல் படிப்பில்
சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே
அவர்களின் வெளியே சொல்லப்படாத கோரிக்கை.
முதலாண்டின் first semester அல்லது second semester தேர்வுதான்
ப்ளஸ் டூவிலும் தேர்வாகி விடுவார்கள். அதற்கு அனுமதிக்க
வேண்டும் என்பதே சுயநிதி முதலைகளின் உள்ளக் கிடக்கை.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக