ஞாயிறு, 8 ஜனவரி, 2017

கணிதம் கற்காமல் இயற்பியலை அறிய இயலாது!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் காலத்து இயற்பியல் புரிந்து கொள்வதற்கு
மிகவும் எளியது. கணிதம் படிக்காதவர் உட்பட அனைவரும்
சிறிது முயன்றால் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
அனால் ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு வந்த
பின்னர் இந்த நிலைமை மாறியது. இயற்பியலானது புரிந்து கொள்வதற்குக் கடினமான ஒன்றாக மாறிவிட்டது.
தொடர்ந்து வந்த குவான்டம் விசையியல் முன்னிலும்
ஆழமான கணித அறிவைக் கோரியது. தற்போது வந்துள்ள இழைக் கோட்பாட்டை ஆழமான கணித அறிவு இல்லாமல்
புரிந்து கொள்ள முடியாது.

இயற்பியலைப்  புரிந்து கொள்ள டென்சார் அல்ஜிப்ரா,
டோப்பாலஜி ஆகிய கணிதத்தின் நவீன பிரிவுகளில்
போதிய அறிவு தேவை. வெய்ல் அல்ஜீப்ரா (Weyl algebra)
போன்ற புதிய கணிதமும் கற்க வேண்டும். பள்ளிகளில்
நாம் கற்ற யூக்ளிட்டின் வடிவியலைக் கொண்டு வளைவான
பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள இயலாது. எனவே வளைந்த
பரப்புக்கான வடிவியலான (curved space geometry) ரீமன்
வடிவியலைக் (Riemannian geometry) கற்க வேண்டும். 
இயற்பியல் மென்மேலும் தீவிரமாகக் கணிதமயம்
ஆகிவருகிறது. கணிதத்தில் ஆழ்ந்த புலமை இல்லாததே
பலராலும்  இயற்பியலைப் புரிந்து கொள்ள முடியாமைக்குக்
காரணமாகும். சமகால இயற்பியல் என்பது ஆழமான கணித
அறிவை உள்ளடக்கியதாகும். எனவே இயற்பியலைக் கற்க விரும்புவோர் கூடவே கணிதத்தையும், இயற்பியலாளர்கள்
உருவாக்கும் புதிய புதிய கணிதப் பிரிவுகளையும்
கற்க வேண்டும். இதுவே தீர்வாகும்.
********************************************************************************* 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக