செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியாது.
பாமக என்பது வேர் முதல் இலை வரை வன்னிய சாதிக் கட்சி;
சாதிவெறியை மூலதனமாகக் கொண்ட கட்சி. 'கோடி வன்னியர்'
கூடும் சித்திரை முழுநிலவு விழாவை ஆண்டுதோறும்
மாமல்லபுரத்தில் கூட்டுவது யார்? திரண்ட கூட்டத்தில்
வீரவுரை (சாதிவெறி உரை) ஆற்றி, சாதிவெறித் தாக்குதலுக்கு
சராசரி வன்னிய மக்களைத் தூண்டுவது யார்?
**
அனைத்து (தலித் அல்லாத) சாதியினரையும் திரட்டி
சாதிவெறிக் கூட்டமைப்பை உருவாக்கியது யார்?
வன்கொடுமைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி
இயக்கம் நடத்துவது யார்?
**
விடை எல்லோருக்கும் தெரியும். அது பாமக. இது
உள்ளங்கை நெல்லிக்கனி. தலித் எதிர்ப்பு என்பதே
அக்கட்சியின் நடைமுறை. வன்னியர் முதல்வர் ஆக
வேண்டும் என்ற முழக்கத்தை பாமக தவிர, வேறு எந்தக்
கட்சியாவது முன் வைத்துள்ளதா?
**
ராமதாஸ்-அன்புமணி-காடுவெட்டி குரு என்ற அச்சில்
சுழன்று கொண்டு, சாதியைப் பயன்படுத்தித் தன் குடும்பம்
கோலோச்ச வேண்டும் என்ற இழிந்த குறிக்கோளுடன்
செயல்படும் பாமக செல்லாக்காசு ஆகும் நாள்
தொலைவில் இல்லை.
----------------------------------------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக