திங்கள், 10 ஆகஸ்ட், 2015

அன்புமணி ராமதாஸ் வீட்டில் இளம்பெண் மர்ம மரணம்!
இது படுகொலையே: மனித உரிமை வழக்கறிஞர்கள் ஆவேசம்!
எம்.பி.க்களின் வீட்டு வேலைக்காரிகள்  கொலை செய்யப் 
படுவது இது இரண்டாவது முறையா?
-----------------------------------------------------------------------------------------------------
நினைவு இருக்கிறதா! உ.பி மாநில பகுஜன் சமாஜ் கட்சி 
எம்.பி தனஞ்செய் சிங் மற்றும் அவர் மனைவி ஜக்ரிதி 
ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் 
அடைக்கப் பட்ட செய்தி! 2013 நவம்பரில் கைது 
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ட இந்த எம்.பி மற்றும் 
அவர் மனைவி மீது இ.பி.கோ 302 (கொலை) பிரிவின் மீது 
வழக்குப் போடப்பட்டது. தங்கள் வீட்டு வேலைக்காரி ராக்கி 
(வயது 35) என்ற பெண்ணை அடித்துக் கொன்றதற்காக 
இவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
**
தற்போது தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி அன்புமணி ராமதாஸ் 
வீட்டில் வேலைக்காரியாக இருந்த மாலினி (வயது 19)
என்ற இளம்பெண் மர்ம மரணம் அடைந்துள்ளார்.   
மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் சிலர் இது 
படுகொலையே என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க 
வேண்டும் என்றும் கோரி வருகிறார்கள்.
**
பிரேத பரிசோதனை முடிவு வந்தவுடன்தான் முழு 
உண்மையும் தெரிய வரும் என்று காவல்துறை 
அதிகாரிகள் தெரிவித்தனர். கற்பழிப்பு ஏதேனும் 
நடந்துள்ளதா என்றும் பிரேத பரிசோதனை முடிவு 
வந்ததும் தெரிந்து விடும் என்று காவல் துறை 
அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
**
அகில இந்திய அளவில் ஒரு எம்.பி.யின் வீட்டில் 
வீட்டு வேலைக்காரி மர்ம மரணம் அடைவது இது 
இரண்டாவது முறை என்று அகில இந்திய 
ஊடகங்கள் கருதுகின்றன. அர்னாப் கோஸ்வாமி 
இப்பொருளில் ஒரு விவாதம் நடத்துவார் என்று 
கூறப் படுகிறது.
****************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக