வியாழன், 31 அக்டோபர், 2019

மருத்துவர்களின் போராட்டம்!
உண்மையான உண்மை இதுதான்!
ஆதரவு இயக்கங்களை ஏன் CPI, CPM நடத்தவில்லை?
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
1) தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில்
மொத்தம் 18,000 மருத்துவர்கள் உள்ளனர். இவர்களில்
15,000 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
மீதி 3000 பேர் விபத்து, அவசரப் பிரிவு, பிரசவம்
ஆகிய பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.
2) போராட்டக்குழு முடிவெடுத்தன் அடிப்படையிலேயே
3000 மருத்துவர்கள், மக்கள் பாதிக்கப்படக் கூடாது
என்று பணி செய்து வருகின்றனர்.
3) அரசு ஆதரவு தொழிற்சங்கம் ஒன்றும், மருத்துவர்களின்
ஆதரவு பெற்ற சங்கம் மற்றொன்றும் ஆக இரண்டு
சங்கங்கள் உள்ளன.
4) இன்று ஏழாவது நாளாக வேலைநிறுத்தம் நடைபெற்று
வருகிறது. மொத்தமே நான்கு கோரிக்கைகளை
முன்வைத்து வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.
5) பிரதானமாக இரண்டே இரண்டு கோரிக்கைகளை
வலியுறுத்தியே போராட்டம் நடந்து வருகிறது.
அ) MCIயின் புதிய அளவீடுகளை (new norms) அரசு
செயல்படுத்தி வருகிறது. இதன்படி மருத்துவ
மனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையைக்
குறைக்கிறது. இதை மருத்துவர்கள் ஏற்கத்
தயாராக இல்லை. இது மருத்துவர்களின் வேலைப்பளுவை
அதிகப் படுத்தும். அன்றாடம் மருத்துவமனைக்கு வந்து
வேலை செய்து விட்டு வீடு திரும்புவதே நரகம் ஆகிவிடும்.
6) மறுபுறம் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு
உள்ளாவார்கள். சிகிச்சைக்காக நீண்ட நேரம்
கியூவரிசையில் காத்திருக்க நேரிடும். அறுவை
சிகிச்சைகளை உரிய நேரத்தில் பெற இயலாது.
அரசு மருத்துவமனைகளின் சேவைத்தரம் குறையும்.
தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்கள்
தள்ளப் படுவார்கள்.
7) ஆ) MD, MS மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு
50 சதம் ஒதுக்கீடு இருந்து வந்தது. MCI முடிவின்படி
அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப்
பதிலாக REMOTE AREASல் உள்ள மருத்துவ மனைகளில்
பணிபுரியும் மருத்துவர்களுக்கு மேற்படிப்பில்
கூடுதலாக மதிப்பெண் வழங்கப் படுகிறது.
8) இதற்கு முன்பு சென்னை GHல் பணியாற்றிய
மருத்துவருக்கும், நீலகிரியில் பணியாற்றிய
மருத்துவருக்கும் இப்படி அனைவருக்கும் 50 சத
ஒதுக்கீட்டால் பயன் கிடைத்தது. தற்போது 30 சதம்,
60 சதம் என்று கூடுதல் மதிப்பெண் (bonus marks)
வழங்கப் பட்டாலும் அது remote areasல் பணியாற்றும்
மருத்துவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. நகர்ப்
புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்குக்
கிடைப்பதில்லை.
9) எனவே முன்பு போல 50 சத ஒதுக்கீடு வேண்டும்
என்று ஒரு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இது unrealistic demand ஆகும். இதற்கு தமிழக அரசு
இணங்கினாலும், மருத்துவக் கவுன்சில் அனுமதிக்காது.
10) மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம்
கேட்பதில் தவறில்லை. இதனால் அரசுக்குப் பெரிய
செலவு எதுவும் ஆகப் போவதில்லை. அப்படி மத்திய அரசு
வழங்கும் ஊதியத்தைக் கொடுக்க மறுத்தாலும், வேறு
மாற்று வழிகள் உள்ளன. ACP (Assured Career Progression)
எனப்படும் TIME BOUND முறையிலான பதவி உயர்வுத்
திட்டத்தை அரசு அறிமுகப் படுத்தினாலே போதும்.
11) ஆனால் அமைச்சர் விஜய பாஸ்கர் முற்றிலும்
முதிர்ச்சியற்ற முறையில் இந்த வேலைநிறுத்தத்தைக்
கையாள்கிறார். மருத்துவர்களின் கோரிக்கையை
ஏற்பதால் அரசுக்குப் பெருஞ்செலவு எதுவும் கிடையாது.
எடப்பாடியும் அடக்குமுறையின் மூலம் மருத்துவர்களை
ஒடுக்கி விடலாம் என்று கருதுகிறார்.
12) இது பஞ்சாலைத் தொழிலாளரின் வேலைநிறுத்தம் அல்ல.
பேருந்துத் தொழிலாளரின் வேலைநிறுத்தம் அல்ல.
இதை அடக்குமுறையின் மூலம் ஒடுக்குவதால்
தற்காலிக வெற்றியை அரசு அடையலாம். ஆனால்
காலப்போக்கில் மருத்துவர்களின் ஒத்துழைப்பு
இல்லாமல், அதிமுக அரசு மக்களின் ஆதரவை
இழக்க நேரிடும்.
13) கொடும் அடக்குமுறையை ஏவிய ப சிதம்பரம்
இன்று 74 வயதில் திகாரில் கம்பி எண்ணிக் கொண்டு
இருக்கிறார் என்பதை அமைச்சர் விஜய பாஸ்கர்
எண்ணிப் பார்க்க வேண்டும். IQ 121 கொண்டுள்ள
சிதம்பரத்துக்கே இந்தக்கதி என்றால், நாளை
தனக்கு என்ன கதி என்று IQ 102 உடைய விஜய பாஸ்கர்
எண்ணிப் பார்ப்பது நல்லது.
14) இன்று (31.10.2019) ஏழாவது நாளாக வேலைநிறுத்தம்
நீடிக்கிறது. தமிழ்ச் சமூகம் ஒரு நோயுற்ற சமூகம்
என்பதை மருத்துவர்களின் நீடித்த வேலைநிறுத்தம்
சுட்டிக் காட்டுகிறது. இந்த வேலைநிறுத்தத்தை
ஆதரிப்பதும், போராடும் மருத்துவர்களின் பக்கம்
நிற்பதும், அரசை நிர்ப்பந்திப்பதும் சமூகப் பொறுப்புள்ள
ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
15) அடக்குமுறையால் ஒரு மயிரும் பிடுங்க முடியாது.
35 ஆண்டுக்கு மேல் நீண்ட என்னுடைய தொழிற்சங்க
அனுபவத்தில் எத்தனையோ அடக்குமுறைகளின்
முதுகெலும்பை முறித்துப் போட்டுள்ளோம். எஸ்மா
சட்டம், 124ஏ பிரிவில் வழக்கு, கணக்கற்ற சேவை முறிவுகள்
(BREAK IN SERVICE) ஆகியவற்றை எதிர்கொண்டு
முறியடித்துள்ளோம்.
16) போராடும் 18,000 டாக்டர்களையும் கொலை செய்ய
வேண்டும்; அல்லது 18,000 போரையும் டிஸ்மிஸ் செய்ய
வேண்டும். அப்போதுதான் அடக்குமுறை வென்றதாக
அர்த்தம் ஆகும். இதை எந்த அரசும் செய்ய இயலாது.
17) ஏழு நாட்களாக நீடிக்கும் இந்த வேலைநிறுத்தத்திற்கு
ஆதரவாகத் தீவிரமான ஆதரவுப் போராட்டங்களை
CPI, CPM கட்சிகள் நடத்தி இருக்க வேண்டும். AITUC, CITU
சங்கங்கள் மூலமாகத் தீவிரமான ஆதரவு இயக்கங்களை
நடத்தி, மருத்துவர்களின் பக்கம்
சமூகம் நிற்கிறது என்று உணர்த்தி இருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால், விஜய பாஸ்கருக்கும்
எடப்பாடிக்கும் அடக்குமுறையைப் பிரயோகிக்க
அச்சம் அல்லது தயக்கம் ஏற்பட்டு இருக்கும்.


18) ஆனால் மு க ஸ்டாலினிடம் ரூ 25 கோடிக்கு சோரம்
போனவர்கள், விஜய பாஸ்கரிடம் சில கோடிக்கு
விலை போகாமல் இருப்பார்களா? IQ 102 உடைய
விஜய பாஸ்கர் இந்தப் போலிகளை மலிவாக
விலைக்கு வாங்கி விட்டார். எனவேதான் ஆதரவு
இயக்கங்களை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து
ஏமாந்த மருத்துவர் சங்கங்கள் தங்கள் சொந்த
பலத்தில் உறுதியாகப் போராட முடிவு செய்து விட்டனர்.
******************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக