சனி, 26 மே, 2018

ஸ்டெர்லைட் 
சீனா -- 32 லட்சம் டன்
சிலி -- 13.4 லட்சம் டன்
ஜப்பான் -- 13 லட்சம் டன்
இந்தியா -- 6.8 லட்சம் டன்
அமேரிக்கா -- 4.8 லட்சம் டன்
ரஷ்யா -- 6 லட்சம் டன்
ஸாம்பியா -- 5.5 லட்சம் டன்
தென் கொரியா -- 4.7 லட்சம் டன்
போலந்து -- 4.5 லட்சம் டன்
ஆஸ்திரேலியா -- 4.2 லட்சம் டன்
ஜெர்மனி -- 3.4 லட்சம் டன்
இது உலக நாடுகளில் தாமிர உற்பத்தி அளவு வரிசையில் முதலாவதாக உள்ள நாடுகள் பட்டியல் - 2012 புள்ளி விவரப்படி!
----------------------------------
ஒரு வீடியோ பார்த்தேன், துக்ளக் இதயா பேசியதாக! அதில் அவர், காப்பர் கனிமம் வெட்டியெடுப்பது ஆஸ்திரேலியாவில் என்றும், ஆனால், அவர்கள் நாட்டில், அதிலிருந்து தாமிர உற்பத்தி செய்யாமல், இந்தியா போன்ற நாடுகளுக்கு கனிமத்தை அனுப்பி, தாமிரம் உருவாக்கி, பின் இறக்குமதி செய்து கொள்கிறார்கள் - அதாவது, அந்த ஆலையால் உண்டாகும் மாசு, தங்கள் மக்களை பாதிக்காமல் காப்பாற்றவே, இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி, ஸ்டெர்லைட் போன்ற நச்சு உருவாக்கும் ஆலைகளை நிறுவ வழி செய்கிறார்கள்! எனும் அர்த்தம் வரும் வகையில்!
அதாவது, நம் மக்களை பலிகடா ஆக்குமளவுக்கு, அந்த தொழிற்சாலைகள் நச்சு உருவாக்கும் ஒன்று, எனும் மறை பொருள் பட பேசியுள்ளார் !
----------------------------------------
நான் மேலே கொடுத்துள்ள பட்டியல், பொதுவெளியில் உள்ளதுதான்! யார் வேண்டுமானாலும் List of countries by copper smelter production என்று கூகிளில் தேடி, தெளியலாம்!
----------------------------------------
இதில் முக்கியமாக, கவனித்தால்,... பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலானவையும், தங்கள் நாட்டிலேயே காப்பர் தயாரிப்பை, வைத்துக்கொண்டிருப்பது தான்! அளவு மட்டுமே வித்தியாசம்.!!!
காரணம், தாமிரம் இல்லாமல், அணுவும் அசையாது, இன்றைய நிலையில்! இது மிகைப்படுத்தல் அல்ல! விவரமானவர்களிடம் இது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.! இந்த உலோகத்துக்கு வெளி நாடுகளை மட்டுமே நம்பினால், பொருளாதாரத்தை சுலபமாக திட்டமிட முடியாது! அந்த அளவுக்கு மிக முக்கியமான உலோகம் இது! மின்னணு உபகரணங்களில், வாகனங்களில், பாட்டரிகளில், மின்கடத்தி வயர்களில், செல் போன் களில், ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ், டீவீ, என, தாமிர உபயோகம் இல்லாத தொழில்நுட்ப இடமே இல்லை, என்று சொல்லலாம்!
--------------------------------
பதிவு அது பற்றி அல்ல!
--------------------------------
மேற்கண்ட நாடுகளில், மிகவும் வளர்ந்த நாடுகளில், தனி மனித உயிருக்கு மிகுந்த, மிகுந்த, முக்கியத்துவம் தரும் சமூகம் அவர்களது! ஓரிரு மரணங்களே, நாட்டை ஸ்தம்பிக்க வைத்து விடும்!
அப்படிப்பட்ட நாடுகளில், இம்மாதிரி தாமிர ஆலைகளை, சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், துளிக்கூட பாதிப்பு ஏற்படா வண்ணம் இயக்குவது எப்படி, என்று தெளிவான தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது!
அதனால், முதலில், ஸ்டெர்லைட் தாமிர ஆலை என்றாலே, என்னவோ உயிர்க்கொல்லி என்பது போன்ற, விஷம பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது, என்று சாமானியன் உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக