புதன், 23 மே, 2018


டிவி சானல்களில் என்ன செய்தி ஓடியதோ, அதைப்
பார்த்து விட்டு எழுதிய பதிவு.இன்று ஒழுங்காகச்
செயல்பட்ட போலீஸ், இதைப்போல நேற்றும்
செயல்பட்டிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது
என்று டிவி சானல்கள் ஒப்பாரி வைத்தன. இன்னொரு
சாவு ஏற்பட்டு விட்டது என்ற உண்மையைத் தெரிவிக்கும்
முகமாக இந்தப் பதிவு எழுதப் பட்டது. டிவி சானல்கள்
பொய் சொல்லி இருந்தால் அது நாளை அம்பலம்
ஆகி விடும். இதை விசாரிக்கச் சொல்லி ஊடக
நண்பர்கள் பலரிடமும் சொல்லி இருக்கிறேன்.  
**
இங்கு வார்த்தையை அளந்து பேச வேண்டும்.
இது குட்டிமுதலாளித்துவச் சுய இன்பம்
அனுபவிக்கிற இடம் அல்ல. முதுகெலும்பை
முறிக்கிற இடம்.zero tolerance towards abuse இங்கு
கடைப்பிடிக்கப்படும். முகநூலில் ஒன்றிண்டு
வார்த்தைகளை வீராவேசமாக எழுதி விட்டால்
புரட்சி என்று நினைத்தால், 124A சட்டப் பிரிவில்
சிறையில் இருந்தவர்களிடம் அது செல்லுபடி
ஆகாது என்பதை  முட்டாள்கள் புரிந்து கொள்ள வேண்டும்..   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக