திங்கள், 14 மே, 2018

இயற்பியல் அறிஞர் பேராசிரியர் சுதர்சன் மறைந்தார்!
இயற்பியலுக்கு மாபெரும் இழப்பு!
அஞ்சலி செலுத்துவோம்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
==================================================
துகள் இயற்பியல், குவான்டம் இயற்பியல் ஆகிய
துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்த பேராசிரியர்
E C G சுதர்சன் (செப் 1931-மே 2018) டெக்சாஸ் நகரில்
இன்று 14.05.2018 காலமானார் என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.

பலமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டவர்
அவர். எனினும் நோபல் பரிசு மயிரிழையில் அவரை
விட்டு விலகியது.

1980களில் பேரா சுதர்சன் சென்னை கணிதக் கழகத்தில்
(Institute of Matscience) பணியாற்றினார். அவரின் 80ஆவது
பிறந்த நாள் விழாவை கணிதக் கழகம் கொண்டாடியது.
அந்நிகழ்ச்சியில் நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்று
அவரை வாழ்த்திப் பேசியது.

பேராசிரியர் சுதர்சன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி
செலுத்துவோம்! அவரின் புகழ் நெடிது நிலைக்கும்.
******************************************************************

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக