வியாழன், 7 நவம்பர், 2019

இந்தியாவிலேயே மிகக் கொடூரமான
பாசிஸ்ட் கேரள முதல்வர் பினராயி விஜயன்!
எனினும் அருந்ததி ராய் முதல் பிரகாஷ் ராஜ் வரை
யாரும் கண்டனம் தெரிவிக்க மாட்டார்கள்!
----------------------------------------------------------------------
அன்று 1970களில் வயநாடு பழங்குடி மக்களின்
உரிமைக்குப் போராடிய வர்கீசை சுட்டுக் கொன்றது
அச்சுத மேனனின் CPI அரசு.

நெருக்கடி நிலைக்காலத்தில் பொறியியல் மாணவர்
ராஜனை மிருகத் தனமாக சித்திரவதை  கொன்றது
அச்சுதமேனன் அரசு.

நக்சல்பாரிகளை, மாவோயிஸ்டுகளை மட்டுமல்ல,
காங்கிரஸ் கட்சியினர், ஆர் எஸ் எஸ் அமைப்பினர்,
CPM கட்சியில் இருந்து விலகிய சந்திரசேகரன்
என்று பலரையும் சுட்டுக் கொன்ற அரசுதான்
கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் அரசு.

அண்மையில் அட்டப்பாடி வனப்பகுதியில் நான்கு
மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்று வெறியாட்டம்
ஆடி இருக்கிறது பினராயி விஜயனின் அரசு.

கொலைகள் மட்டுமல்ல; கற்பழிப்பிலும் தன் கயமைத்
தனத்தை, கொடூரத்தை வெளிப்படுத்தி உள்ளது
பினராயி அரசு.

13 வயதுச் சிறுமியையும் அவளின் தங்கை 9 வயதுச்
சிறுமியையும் கற்பழித்துக் கொன்று தூக்கில்
தொங்க விட்டனர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த
கயவர்கள். போலீஸ் தரப்பில் வேண்டுமென்றே
போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யாமலும்,
முறையாக வாதாடாமலும் இருந்ததால் குற்றவாளிகள்
விடுதலை செய்யப் பட்டனர். வழக்கு நடக்கும்போது
அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கே செல்லவில்லை.

கற்பழிப்புக் குற்றவாளிகள் விடுதலையானது
பாசிஸ்டு பினராயி அரசுக்கு நெருக்கடியை
ஏற்படுத்தியது. இதில் இருந்து மக்களின் கவனத்தைத்
திசைதிருப்பவே மாவோயிஸ்டுகளைச் சுட்டுக்
கொன்றது பாசிச பினராயி அரசு.

ஆக, மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொல்ல எந்தவொரு
காரணமும் தேவை இல்லை. மக்களின் கவனத்தைத்
திசை திருப்ப வேண்டுமெனில், மாவோயிஸ்டுகளைச்
சுட்டுக் கொன்று விடலாம்.

சரி, இதன் பிறகும் இன்னொரு பாசிச வெறியாட்டத்தை
நடத்தியது பாசிச பினராயி அரசு. மாவோயிஸ்ட்
படுகொலை பற்றிய துண்டுப்  பிரசுரங்களை
வைத்திருந்த தங்களின் சொந்தக் கட்சியைச்
சேர்ந்த இரண்டு இளைஞர்களை UAPA சட்டத்தின்
கீழ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது
பாசிச பினராயி அரசு.

இவ்வளவு நடந்தும் என்ஜிஓ கைக்கூலி அருந்ததி ராயோ
அல்லது கூத்தாடி பிரகாஷ் ராஜோ பாசிச பினராயி
விஜயனைக் கண்டிக்கவில்லை. நாலு பேரைப்
பறிகொடுத்த மாவோயிஸ்ட் கட்சியும் கூட,
பின்ராயி அரசை பாசிச அரசு என்று வரையறுக்கவில்லை.
ஏனெனில் இவர்கள் போலி மாவோயிஸ்டுகள்;
கோழைகள்; பிழைப்புவாதிகள்.

இந்தியாவிலேயே கொடிய பாசிச அரசு என்றால்
அது பினராயி விஜயனின் போலிக் கம்யூனிஸ்ட் அரசுதான்.
******************************************************
     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக