திங்கள், 25 நவம்பர், 2019

டிராட்ஸ்கியிசத்தையும்

(தோழர் ஏ எம் கே முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி!)

நவமவர் (நவம்பர் 25)

திருப்பூர் குணா
மருதுபாண்டியன்
சிலம்பரசன் சே
தோழர் ஞானம்
செந்தழல்  புவனசேகர்

பகத்சிங் பாரதி
கிருஷ்ணசாமி தியாகராஜன்


அது மத்திய அரசு நடத்தும் மத்தியக் கல்வி
நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில்
OBC இடஒதுக்கீடு உண்டு. அது அனைவரும்
அறிந்ததே.

இங்கு நான் கூறுவது யாதெனில்,
மத்தியத் தொகுப்புக்கு 26 மாநிலங்களும்
வழங்கும் இடங்களில் இடஒதுக்கீடு இல்லை
என்பதே.

மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில்
உள்ள இடம் சொற்பமே (நூற்றுக் கணக்கில்).
ஆனால் 26 மாநிலங்களும் சேர்ந்து
மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் இடங்கள்
(ஆயிரக் கணக்கில்) ஒப்பீட்டளவில் மிக மிக அதிகம்.
உரிய புள்ளி விவரங்களைப் பார்க்கவும்.

அ) மத்திய அரசே நடத்தும் கல்லூரிகளில் உள்ள
இடங்கள்
ஆ) 26 மாநிலங்களும் சேர்ந்து மத்தியத் தொகுப்புக்கு
வழங்கும் இடங்கள்
ஆகிய இவ்விரண்டு வகை இடங்களையும் மத்திய
அரசுதான் நிரப்புகிறது. இவ்விரண்டில் (அ)வில்
OBCக்கு இடஒதுக்கீடு உண்டு. (ஆ)வில் இல்லை.
இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள
வேண்டும்.
   

BSNL ஒருபோதும் தானாக அழியாது. நாமாக
அழித்தால்தான் உண்டு. போட்டி நிறுவனங்கள்
BSNLன் NETWORKஐ நம்பித்தான் வாழ்கின்றன.
எனவே BSNLஐ அவர்களால் அழிக்க இயலாது.
புத்தாக்கத்தின் பின், BSNL  சிறப்பாகச் செயல்பட
இயலும்.
  
சட்டி செய்யத் தெரியாதவனா தமிழன்?
------------------------------------------------------------
சகரக் கிளவியும் மொழிமுத லற்றே
அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே
என்கிறது தொல்காப்பியம்.

அதாவது சகரம் மொழிமுதல் வராது என்று பொருள்.
அதாவது ச என்ற எழுத்தைக் கொண்டு ஒரு சொல்
தொடங்காது என்று பொருள்.

தேவநேய பாவாணர் இதை ஏற்கவில்லை.
கானப்பேர் எயில் கடந்த தமிழன் சட்டி செய்யத்
தெரியாமல் இருந்தானா என்று கேட்டார் அவர்.
புரிகிறது அல்லவா! சகரம் மொழிமுதல் வராது
என்றால், சட்டி என்ற சொல் தமிழில் இருக்கக்
கூடாது அல்லவா?

சட்டி, சண்டை, சரிவு ஆகிய சொற்கள் சரியான
தமிழ்ச் சொற்கள் அல்ல என்று கூற இயலுமா?

"வெல்போர் வேந்தன் வீரரைச் சவட்டி"
என்று திருவிளையாடல் புராணத்தில் வருகிறது.
சவட்டி என்ற சொல்லின் பொருள் "அடித்து உதைத்தல்"
என்பதாகும்.

நெல்லை மாவட்டத்தில் பேச்சு வழக்கில் அடிக்கடி
"மிதிச்சுச் சமட்டிப் போடுவேன்" என்று சொல்வார்கள்.
மேற்கூறிய செய்யுள் வழக்கான "சவட்டி"  என்பதே
பேச்சு வழக்கில் "சமட்டி" என்று வருகிறது.

ஆக, சகரம் மொழிமுதல் வரும் என்பதே உண்மை.
தொல்காப்பிய நூற்பா ஏடு பெயர்த்து எழுதும்போது
நேர்ந்த தவறாகும் என்பது என் முடிவு.
      
===========================================
பிரிவு 5 a (3) கூறுவதாவது:-
மத்திய கல்வி நிலையங்களில் உள்ள 27 சதம் இடங்கள்
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் மத்திய கல்வி
நிலையங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம்
2006ன் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன.

இந்த ஒதுக்கீடு மத்திய கல்வி நிலையங்களில் உள்ள
இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதாவது 26 மாநிலங்களும் சேர்ந்து வழங்கும்
இடங்களுக்குப் பொருந்தாது.

மத்திய கல்வி நிலையங்களில் நூற்றுக் கணக்கான
இடங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் OBCக்கு
இட ஒதுக்கீடு உண்டு.
ஆனால், 26 மாநிலங்களும் சேர்ந்து வழங்கும் இடங்கள்
ஆயிரக் கணக்கில் உள்ளன. இவற்றில் இடஒதுக்கீடு
கிடையாது.   
 
இதைத்தான் மேற்கண்ட பிரிவு 5 a (3) கூறுகிறது.
----------------------------------------------------------------------------

All India Quota என்ற பிரிவானது மத்திய கல்வி
நிலையங்களில்  உள்ள இடங்களையும் மாநிலங்கள்
வழங்கும் இடங்களையும் உள்ளடக்கியது.
எனவே அந்தத் தலைப்பின் கீழ், மத்திய கல்வி
நிலையங்களில் உள்ள இடங்களுக்கு மட்டும்
ஒதுக்கீடு என்று கூறுகிறது. அந்த ஒதுக்கீடானது
2006ஆம் ஆண்டுச் சட்டப்படி வழங்கப் படுகிறது
என்றும் கூறுகிறது.

2006ஆம் ஆண்டுச் சட்டம் என்ன சொல்கிறது என்று
அருள் கூர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இடஒதுக்கீடு என்பது தெளிவான சொற்களில்
கூறப்பட வேண்டிய ஒன்று. யாரும் உய்த்து உணரத்
தேவை இல்லாமல், வாசிக்கும் எவர் ஒருவரும்
எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் இடஒதுக்கீடு
பற்றிய அறிவிப்பு இருத்தல் வேண்டும்.

பரிமேலழகர் உரையோ கோனார் உரையோ
தேவை இல்லாமல் தெளிவுபடச் சொல்ல வேண்டும்.
ஆங்கிலத்தில் in no uncertain terms என்றும், in unequivocal
terms என்றும் in unambiguous terms என்றும் ஆங்கிலத்தில்
சொல்லுவார்கள்.   
   
எனவே நீங்கள் உங்களின் தற்குறிப்பேற்றத்தை
இதில் புகுத்திக் கூறும் கருத்து ஏற்புடையது அல்ல.

சட்டி செய்வதையும் தொல்காப்பிய நூற்பாவையும்
தொடர்பு படுத்தியவர்  மரியாதைக்குரிய மறைந்த
தமிழறிஞர் தேவநேயப் பாவாணர். நான் அல்லன்.
இதை நான் என்னுடைய பின்னூட்டத்திலேயே
எழுதி உள்ளேனே. அருள்கூர்ந்து நான் எழுதியதைச்
சரியாகப் படித்து விட்டுப் பேசுமாறு வேண்டுகிறேன்.

தமிழில் எப்படி ஐயா சகரம் மொழிமுதல் வராமல்
போகும்?  அப்படியானால் சட்டி என்ற சொல் வேறு
மொழியில் இருந்து வந்ததா? கானப்பேர் எயில்
கடந்த தமிழன் சட்டி செய்யத் தெரியாமல் இருந்தனா
என்று ஆவேசப் பட்டவர் பாவாணர்.





  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக