திங்கள், 25 நவம்பர், 2019

திரு முகிலன் அவர்களின் மறுப்புரையும்
அதன் மீதான எமது எதிர்வினையும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
திரு முகிலனின் மறுப்புரை தோழர் பத்ரிநாத் மூலமாக
எனக்குக் கிடைக்கப் பெற்றது. தோழர் பத்ரிக்கு நன்றி!

1) திரு முகிலனின் மறுப்புரை மிகவும் hollowஆக உள்ளது.
பொருட்படுத்தக் கூடிய எந்த அம்சமும் அதில் இல்லை.
மாறாக கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்களும்
வசவுகளும் மட்டுமே உள்ளன.

2) "BSNLன் முன்னாள் ஊழியர், இன்னும் BSNL பணத்தில்
வயிறு வளர்க்கும் நபர்" என்று எழுதுகிறார் திரு முகிலன்.
BSNLன் முன்னாள் இந்நாள் தொழிலாளர்களை BSNLன்
பணத்தில் வயிறு வளர்க்கும் நபர்கள் என்று எழுதுவது
பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.

சரி, திரு முகிலன் BSNLன் பணத்தில் வயிறு
வளர்க்கவில்லையா? இல்லை என்றால் ஜியோவின்
பணத்தில் வயிறு வளர்க்கிறாரா? மல்லாந்து படுத்துக்
கொண்டு எச்சில் துப்பினால் மார்பின் மேல்தான்
வந்து விழும் என்று தெரியாதா?

3) BSNL ன் நிதி ஆதாரம் பற்றியோ, தொழில்நுட்பம்
பற்றியோ, NGN பற்றியோ, WiMax ஸ்பெக்ட்ரம் பற்றியோ
இக்கட்டுரை பேசவில்லை. அவையெல்லாம் இக்கட்டுரையின்
கருப்பொருள் அல்ல. எனவே அதைப்பற்றி ஏன் பேசவில்லை
என்று திரு முகிலன் கேட்பது கேலிக்கு உரியது.
    
4) எமது கட்டுரை VRSல் போகலாமா வேண்டாமா என்று
முடிவெடுக்க உதவும் ஒரு வழிகாட்டும் கட்டுரை (a guidance) .
இன்றைய சூழலில் VRSல் செல்வதே சரியான முடிவு என்று
எமது கட்டுரை வழிகாட்டுகிறது. எமது கட்டுரையின்
ONE POINT AGENDA இது மட்டுமே

5) ஊழியர்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்கள்.
சார், VRSல் போகலாமா வேண்டாமா, பதில் சொல்லுங்கள்,
"Say Yes or No" என்று கேட்கிறார்கள். அதற்குப் பதில்
சொல்லும் கட்டுரை இது. "YES, VRSல் போகலாம் என்று
உறுதியுடன் சொல்கிறது எமது கட்டுரை.

6) இவ்வாறு உறுதியுடன் சொல்ல அஞ்சும் கோழைகளே
சங்கத் தலைமைகளில் நிறைந்துள்ளார்கள். எனவே
ஊழியர்கள் பலர் VRS குறித்து வழிகாட்டும்படி கேட்டுக்
கொண்டதற்கு இணங்க நியூட்டன் அறிவியல் மன்றம்
ஒரு கட்டுரையை எழுதியது. ஆக, இக்கட்டுரை
ஊழியர்களின் தேவையில் இருந்து பிறக்கிறது.
(Born out of objective compulsions and not from my subjective wish).

7) மயிராண்டி, ஹைகோர்ட்டான் என்றெல்லாம்
வசவுகளைப் பிரயோகம் செய்வது திரு முகிலனின்
நோய் மனத்தின் வெளிப்பாடு. இது அவர் மீது பரிதாபம்
கொள்ள வைக்கிறது.

8)  பொதுவெளியிலும் சரி, தனிப்பட்ட முறையிலும்
சரி, கண்ணியமாக உரையாட முடியவில்லை என்பது
திரு முகிலனின் பலவீனத்தைக் குறிக்கும். அதை அவர்
மாற்றிக் கொள்வது அவருக்கு நலம் பயக்கும்.

9) என்னதான் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம்
செய்தாலும், திரு முகிலன் மீது கோபம் கொள்ள
விரும்பவில்லை. ஏனெனில், திரு முகிலன் என்னை விட
வயதில் இளையவர்; அனுபவத்திலும் இளையவர்தான்.

10) திரு முகிலன் VRSல் செல்கிறாரா அல்லது பணியில்
நீடிக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அவருடைய
நலன் சார்ந்து அவர் முடிவு எடுக்கட்டும். அவருடைய
வாழ்வில் அவர் எல்லா நலமும் பெறட்டும் என்று
மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
*****************************************************


          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக