புதன், 27 நவம்பர், 2019

மீத்தேன் ஆய்வுத் திட்டம் ரத்து!
ஓர் உண்மை நிலை விளக்கம்!
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
1) மண்ணைத் தோண்டி பூமிக்கு அடியில் இருந்து மீத்தேன்
எடுப்பதில் மூன்று வகை உண்டு. இது தவிர கடலுக்கு
அடியில் இருந்தும் மீத்தேன் எடுக்கப் படுகிறது.

2) (அ) பாரம்பரிய மீத்தேன் (conventional methane)
(ஆ) ஷேல் பாறைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மீத்தேன்.
இது shale gas எனப்படுகிறது.
(இ) கரிப்படுகை மீத்தேன் (coal bed methane)
ஆகிய மூன்று வகைப்பட்ட மீத்தேன் மண்ணுக்கு அடியில்
இருந்து கிடைக்கும்.

3) தமிழ்நாட்டில் பாரம்பரிய மீத்தேன் 1985 முதலே
எம் ஜி ராமச்சந்திரன் முதல்வராக இருந்த காலம்தொட்டே
எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வகை மீத்தேன் மண்ணுக்கு
அடியில் குறைந்த ஆழத்திலேயே கிடைக்கும். இதனால்
சுற்றுச் சூழலுக்கோ விளைநிலங்களுக்கோ நிலத்தடி
நீருக்கோ பெரிய அளவு பாதிப்பு இருக்காது.

4) ஷேல் வாயு எனப்படும் மீத்தேன் தமிழ்நாட்டில்
இல்லை. அதாவது வணிக நோக்கில் லாபகரமான
ஷேல் வாயு எடுப்பது தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை.
பத்து ரூபாய் மீத்தேனை எடுப்பதற்கு பத்தாயிரம்
ரூபாய் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

5) கரிப்படுகை மீத்தேன் (coal bed methane) எடுக்கும் திட்டம்
என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு பேரழிவுத்
திட்டம். நிலத்தடி நீரையும் விளைநிலங்களையம்
பெருமளவில் பாதிக்கும் திட்டம். தமிழக வயல்களைப்
பாலைவனமாக்கும் திட்டம் இது.        
  
6) கரிப்படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்குத்தான்
அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
அனுமதி அளித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த
ஜெயலலிதா அந்த அனுமதியை ரத்து செய்து விட்டார்.
       
7) தற்போது காவிரிப் படுகையில் ஷேல் வாயு எடுக்கும்
திட்டத்தைக் கைவிடுவதாக ONGC நிறுவனம் அறிவித்து
உள்ளது. இது வரவேற்கத் தக்க முடிவு. இது நியூட்டன்
அறிவியல் மன்றத்துக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

8) தொலைக்காட்சி சானல்கள் இது குறித்து விவாதம்
நடத்தக் கூடும். ஆனால் அவர்கள் நடத்தும் விவாதம்
முற்றிலும் பயனற்றதாகவே இருக்கும். ஏனெனில்
அறிவியலே அறியாத தற்குறிகளான அரசியல் கட்சிப்
பிரமுகர்களை வைத்து விவாதம் என்ற பெயரில்
அறியாமையையாக கூட்டாக வெளிப்படுத்துவார்கள்.
இது ஒரு சமூகத் தீமை ஆகும்.

9) அல்லது சுற்றுச் சூழல் போராளிகள்(?) என்ற பெயரில்
பொருளாதார நிபுணர்களை(??) அல்லது அறிவியல்
கற்காத வழக்கறிஞர்களை வைத்து விவாதம்
நடத்துவார்கள். இதுவும் ஓர் இழிந்த சமூகத் தீமை
ஆகும்.

10) மீத்தேன் எடுப்பது என்பது முற்றிலும் ஓர் அறிவியல்
சப்ஜக்ட். ஷேல் பாறைகள் என்றால் என்ன என்றோ
ADSORPTION என்றால் என்னவென்றோ தெரியாத
முட்டாள்களைக் கொண்டு நடத்தும் விவாதம் நடத்துவது 
சமூகக் கயமை ஆகும்.    

11)ADSORPTION என்றால் என்ன?
Adhere to, adhesive ஆகிய சொற்களின் பிறப்பு
போன்றதே adsorption என்ற சொல்லின் பிறப்பும்.


ஒரு பொருளின் அணுக்களோ அயான்களோ
மூலக்கூறுகளோ இன்னொரு பொருளின் surfaceல்
ஒட்டிக் கொள்ளுதல் adsorption எனப்படும்.

எனினும் adsorption நிகழ்ந்து ஒட்டிக் கொண்ட
பின்னால், அதை பிரித்தெடுப்பதும் கடினமே.

உதாரணமாக மீத்தேன் என்னும் வாயு, பாறையாகிய
solidல் ஒட்டிக் கொண்ட பின்னால், ஒட்டிக்கொண்ட
வாயுவின் movement கிட்டத்தட்ட முற்றிலுமாக
நின்று விடுகிறது. அதாவது entropy அறவே குறைந்து
விடுகிறது. entropy குறைந்து விட்டதால், spontaneous
process என்பதற்கு இடமில்லை.

எனவே external agent மூலமாகத்தான் movement
ஏற்படுத்த முடியும். அப்படி ஏற்படுத்தித்தான்
ஒட்டிக் கொண்டுள்ள பொருளை surfaceல் இருந்து
பிரித்தெடுக்க முடியும். இப்படிப் பிரித்தெடுப்பது
ஒரு violent processதான்.

ஷேல் வாயு பிரித்தெடுப்பதில், ஒரு கரைசலை
(சில ரசாயனங்கள் கலந்த தண்ணீராலான கரைசல்)
அதிக வேகத்துடன், அதிக impact ஏற்படுத்தும்
விதத்தில் பீய்ச்சி அடித்தால்தான், surface ல் ஒட்டிக்
கொண்டிருக்கும் வாயு நகரும். இதுதான் ஷேல் வாயு
எடுக்கும் முறை.
    எனவே ஊடகங்களே திருந்துங்கள்!


மருதுபாண்டியன்   ஷா (ஷேல் வாயு)


இதிலும் ADSORPTION மூலமாகத்தான் நிலக்கரிப்
பதிவுகளின் மீது மீத்தேன் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.


பொருளாதார நிபுணர் என்று உலகில் எவரும் இல்லை.
பொருளாதார முட்டாள்கள் மட்டுமே உலகெங்கும்
நீக்கமற நிறைந்துள்ளார்கள்.
பொருளாதாரம் என்பதே முட்டாள்களின் சப்ஜக்ட்தான்.

உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் யார்
என்று என்னைக் கேட்டால் நான் இரண்டு பேரைக்
குறிப்பிடுவேன். 1. ராஜாத்தி அம்மாள் 2. செத்துப்போன
சரவணா பவன் ராஜகோபால். இந்த இருவருமே
பொருளாதாரத்தில் சாதித்துக் காட்டியவர்கள்.
இவர்களுக்கு உலகம் முழுவதும் சொத்து உள்ளது.
அல்லது உலகம் முழுவதும் பிசினஸ் உள்ளது.
இவர்கள் பள்ளிப்படிப்பு கூட இல்லாத தற்குறிகள்.
ஆனால் பொருள் சேர்ப்பதில் நிபுணர்கள்.

   

திராவிடத் தற்குறிகள், தேசியத் தற்குறிகள்,
தற்குறிகளான தமிழ்ப் பண்டிட்டுகள் ஆகியோரை
வைத்து தற்குறிகளான நெறியாளர்கள் SCIENCE SUBJECTல்
நடத்தும் விவாத நிகழ்ச்சிகளால் என்ன பயன் விளையும்?
இதைக் கண்டிக்காத ஒரு தற்குறிச் சமூகம்!
எங்கும் எதிலும் தற்குறித்தனம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக