புதன், 10 ஜூன், 2015

திரு ஸ்நோடன் அவர்கள் கவனத்திற்கு,
------------------------------------------------------------------
(தங்களின் முதல் பின்னூட்டம் குறித்து)
----------------------------------------------------------------
 ஈழப்போரின் இறுதிக் கட்டம் குறித்த தங்களின் விவரிப்பு 
சற்றும் உண்மையோடு பொருந்தவில்லை என்பதைப் பல 
நண்பர்கள் என்னிடம் கூறி உள்ளனர்.
**
 ஈழப்போரின் இறுதிக் கட்டம் என்பது 2009 மே மாதம் 
16,17,18,19 ஆகிய தேதிகளில் நிகழ்ந்தது. ஆனால், தாங்கள் 
ஆனந்தபுரம் சுற்றி வளைப்பின் இறுதியிலேயே, புலிகளின் 
கட்டளைத் தலைமை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது 
என்று கூறி இருக்கிறீர்கள். ஆனந்தபுரம் சுற்றிவளைப்பும் 
சிங்கள முற்றுகையும் 2009 ஏப்ரல் 5ஆம் தேதியில் நடந்து 
முடிந்து விட்டன. அதன் பிறகும் புலித் தலைமை,
ஒரு மாத காலத்துக்கும் மேலாகப் போர் புரிந்தது.
**
எனவே, புலிகளின் கட்டளைத் தலைமை ஏப்ரல் 5, 6 
தேதிகளில் முடிவுக்கு வந்து விட்டது என்று தாங்கள் 
கூறியுள்ளது உண்மையல்ல. தயவு செய்து விளக்கம் 
தரவும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக