ஞாயிறு, 28 ஜூன், 2015

பொருள் செறிந்த கட்டுரை. ஆயினும் முழுமையும் ஏற்கத்
தக்கதன்று. சமூக இயக்கமும் சமூகத்தின் வளர்ச்சியும்
சுழலேணிப் படி முறையில் (spiral growth) அமைந்தவை.
மேற்படியில் ஏற ஏற, கீழ்ப்படியில் உள்ள விழுமியங்கள்
கைவிடப் படுத்தல் இயற்கையே ஆகும். இதையே,
 "பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே
என்கிறது தமிழ் இலக்கணம்.
**
"Growth means change; there is no growth without change" என்கிறது
மார்க்சியம். அப்படியாயின் CHANGE என்பது என்ன என்று
கேள்வி எழுகிறது.
"Change is the disappearance of old and the appearance of new"
என்கிறது மார்க்சியம்.
**
பாம்பு சட்டையை உரிப்பது போல, சமூகமும் தொடர்ந்து
சட்டையை உரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் குறை
காண்பது மானுட இயற்கைக்கு எதிரானது.
**
ராஜ்கௌதமன் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்குப்
பெரிதும் ஆட்பட்டவர். எனவே அவர் பி.ந கருத்துகளை
பாரிய ஆய்வு முடிவு போல முன்வைக்கிறார். இது ஏற்கத்
தக்கதன்று. பின்நவீனம் என்பதால் அல்ல; மானுட
இயற்கைக்கும் சமூக இயக்கத்துக்கும் எதிராக
இருப்பதால்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக