செவ்வாய், 23 ஜூன், 2015

சிங்கள வெறியன் ராஜபக்சேவின் கைக்கூலிகள்!
--------------------------------------------------------------------------------
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் (மே 2009) சுற்றி
வளைக்கப்பட்ட 22000 மக்களைக் காப்பாற்றுவதற்காக,
விடுதலைப் புலிகள் சரணடைவது என்ற முடிவை
எடுத்தார்கள். இந்த முடிவை எடுக்காமல் இருந்து
இருந்தால், 22000 மக்களையும் சிங்களக் காடையர்கள்
அழித்து இருப்பார்கள்.
**
இந்த முடிவு ரகசியமான முடிவு கிடையாது. பகிரங்கமாக
சர்வதேச சமூகத்துக்குச் சொல்லப்பட்ட முடிவாகும். இதைத்
தொடர்ந்து, வெள்ளைக்கொடி ஏந்திச் சரண் அடைவது என்று
தீர்மானிக்கப் பட்டது. இவ்வாறு வெள்ளைக்கொடி ஏந்தி
வர வேண்டும் என்று யோசனை தெரிவித்ததே சிங்க அரசின்
பாதுகாப்புச் செயலர்தான்.
**
ஆனால், சிங்கள அரசின் வாக்குறுதியை நம்பி, சரண்
அடைந்த புலிகள் அனைவரையும், கோத்தபய ராஜபக்சே
உத்தரவின் பேரால், சிங்களப் படை சுட்டுக் கொன்றது.
இனப்படுகொலையி நிகழ்த்திய சிங்கள ராணுவம்,
இவ்வாறு போர் நெறிமுறைகளை மீறி, சரண்
அடைந்தவர்களைச்சுட்டுக் கொன்றது கொடிய போர்க்
குற்றம் ஆகும். இதில் இருந்து தப்பிக்க, ராஜபக்சே அரசு
எவரும் சரண் அடையவில்லை என்று பொய் கூறுகிறது.
**
ராஜபக்சே அரசின் இந்தப் பொய்யை அவரின் கைக்கூலிகள்
உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். இதைக்
கண்டிக்கிறோம்; முறியடிப்போம்!             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக