திங்கள், 22 ஜூன், 2015

"பேதை கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்று" என்பது போல்,
தங்கள் மன விகாரங்களை, அறியாமையை  பின்னூட்டமாக
இடுதல் பரிதாபத்துக்கு உரியது. இத்தொடரில் இதுகாறும்
வந்துள்ள கட்டுரைகளில், நடந்த நிகழ்வுகள் மட்டுமே
சொல்லப் பட்டுள்ளன. புலிகளின் தோல்வி ஏன் என்பதற்கான
காரணங்கள், அது குறித்த பகுப்பாய்வு ஆகியவை இனிமேல்தான்
சொல்லப்பட இருக்கின்றன.
**
இத்தொடரில் இதுவரை சொல்லப்பட்ட புலிகள் பற்றிய
விவரங்கள் யாவும் புலிகளின் அதிகாரபூர்வ அறிவிப்புகளே
ஆகும். சான்றாக,  கிளிநொச்சி வீழ்ச்சியை "பாரியதொரு
தோல்வி"என்றே புலிகள் கூறினார். புலிகளின் அதிகாரபூர்வ
இணையதளங்களைப் பார்க்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக