ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தேசிய இனப் பிரச்சினை பற்றிய எந்த ஒரு புரிதலுமற்ற
நுனிப்புல் ஆசாமிகளான குட்டி முதலாளியப்
புல்லுருவிகளான BBC ஆட்களுக்கு என்ன புரிதல் இருக்கும்?
அவர்களால் எதை விளங்கிக் கொள்ள முடியும்?

அசாம் ஒப்பந்தம் என்பது எவ்வளவு வலிமையான
ஆயுதம் என்ற புரிதலே இல்லாமல் எழுதுகிறவர்கள்
அவர்கள். அசாம் ஒப்பந்தம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
அதைப்பற்றிப் பேசாமல் இன்றைய சிக்கலுக்குத் தீர்வு கிடையாது.

1985ல் போடப்பட்ட அசாம் ஒப்பந்தத்தை நேர்மையுடன் 
காங்கிரஸ் அரசுகள் அமல்படுத்தி இருந்தால் சிக்கல்
இவ்வளவு பெரிதாகி இருக்காது.

கோட்பாட்டுப் பிரச்சினை!
----------------------------------------
இக்கட்டுரை ஒரு முக்கியமான கோட்பாட்டுப்
பிரச்சினையை (theoretical question) எழுப்புகிறது.
இன்றைய அசாம் பிரச்சினை எழுப்புகிற கோட்பாட்டுப்
பிரச்சினையே அது.
குடியுரிமை வழங்குவதில் இன்று உலகில் எந்த
நாடும் தாராள மனதுடன் இல்லை. ஏற்கனவே
வெளிநாட்டவருக்கு வழங்கிய குடியுரிமையால்
ஒவ்வொரு நாடும் சிக்களை சந்தித்துக் கொண்டு
இருக்கிறது.

ஆயிரக் கணக்கில் லட்சக் கணக்கில் கூட்டம்
கூட்டமாக குடியுரிமை வழங்குவதற்கு இன்று
எந்த நாடும் தயாராக இல்லை. இந்தப் பின்னணியில்
இருந்துதான் விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

அசாம் மக்களின் போராட்டமும்
மேற்கு வங்கத்தில் நிகழும் வன்முறையும்!
----------------------------------------------------------
அசாமில் நடைபெறும் அசாமிய மக்களின்
போராட்டம் இயற்கையானது. அது வந்தேறிகளை
எதிர்த்து மண்ணின் மைந்தர்கள் நடத்துவது.
அது நியாயமானது.

அசாம் மக்களைப் பொறுத்தமட்டில் மேற்கு வங்கத்தில்
இருந்து அசாமுக்கு வந்த வங்காளிகளும்
வந்தேறிகள். அசாமியப் பழங்குடிகளின்
வாழ்வாதாரத்தைச் சுரண்டுபவர்களே அவர்கள்.

ஒரு உதாரணம் பார்ப்போம். திரிபுரா என்ற மாநிலத்தின்
முதல்வராக இருந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. இவர்
மார்க்சிஸ்ட் தலைவர். இவர் ஒரு வங்காள பிராமணர்.
ஒரு வங்காளி எப்படி பழங்குடி மக்களின் மாநிலமான
திரிபுராவுக்கு முதல்வராக இருந்தார்? சிந்தித்துப்
பார்த்து விடை காணுங்கள்.


இன்றைய தமிழ்நாட்டில் மணியரசன் அவர்களின் போராட்டம்!

நீங்கள்தான் வலதுசாரி அமித்ஷாவின் கருத்தைப்
பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள். குடியுரிமை
வழங்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். நான் தெளிவாக
இருக்கிறேன். வந்தவருக்கெல்லாம் குடியுரிமை
என்பதைத் தீவிரமாக நான் எதிர்க்கிறேன்.
அசாம் ஒப்பந்தத்தை அமல்படுத்துங்கள் என்பதே
எனது கோரிக்கை.

ஆனால் மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறையானது
செயற்கையானது. மமதா பானர்ஜியின் அரசியல்
ஆதாயத்துக்காக, வாக்கு வங்கி ஆதாயத்துக்காக
செயற்கையாக நடத்தப் படுவது.

இது நூறாண்டு காலமாக நீடித்து நிற்கிற பிரச்சினை.
இது இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் புறத்தில்
உள்ள எல்லைப்புற நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள்
ஊடுருவும் பிற நாட்டு மக்களால் நமக்கு ஏற்படும்
பாதிப்பு பற்றிய பிரச்சினை.

இதற்கும் தமிழ் ஈழச் சிக்கலுக்கும் எந்தவொரு
தொடர்பும் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட
பிரச்சினை.நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரும்
அவசியமே இல்லாமல், ஒரு நிர்வாக உத்தரவு மூலமே
(Executive order) ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை
வழங்க இயலும்.

இன்று 19 லட்சம் பேர் மட்டும் வந்தேறிகள் என்று
கண்டு பிடித்துள்ளனர். உண்மையில் இதுவரை
ஒரு கோடிப்பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி
வந்துள்ளனர். அவர்களில் வங்க தேசத்தில் இருந்து
ஊடுருவிய முஸ்லிம்களே பெரும்பாலோர்.

1971 முதல் இன்று வரை சட்ட விரோதக் குடியேறிகளுக்கு
பல்வேறு சமயங்களில் மத்திய அரசு குடியுரிமையை
வழங்கி உள்ளது. இதுதான் உண்மை. தற்போதைய பிரச்சினை
மாட்டிக் கொண்ட 19 லட்சம் பேர் பற்றிய பிரச்சினை மட்டுமே.

இருக்கிறது. இலவசமாக வழங்கி வருகிறோம்.
(நாளை நான் சென்னை அரும்பாக்கம் வைணவக்
கல்லூரியில் சூரிய கிரகணம் குறித்துப் பேசுகிறேன்.
காலை 11 மணி முதல் 1 மணி வரை நிகழ்ச்சி).
நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்னால் பார்க்க முடிந்தால் பார்க்கவும். 


எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டுதான்
சிந்திக்க வேண்டும். நீர்க்குமிழித் தன்மை உடைய
கணப்பொழுதுக்கான சிந்தனை பயனற்றது.

சரியாகச் சொன்னீர்கள். கடந்த காலத்தில் பல
ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.
அப்போது பலர் இந்தியக் குடியுரிமையை
விரும்பவில்லை. ஈழம் கிடைத்து விடும் என்று
நம்பிக் கொண்டிருந்தனர்.

நாளை அனுப்புகிறேன்.

அருள்கூர்ந்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.
அறிவாலயம் எப்படி வாஸ்து சாஸ்திரத்தில்
திளைக்கும்? உங்களின் காழ்ப்புணர்ச்சியை திமுக
மீது காட்டாதீர்கள். உதயநிதி இங்கர்சாலை விஞ்சிய
பகுத்தறிவுவாதி என்ற உண்மை தெரியாமல் பேசுவதா?
ஆதாரம் அல்லது லிங்க் அல்லது விளக்கம் இப்படி
ஏதாவது இல்லாமல் பேசுவதா?
 

எனக்கு மேலதிக விவரங்கள் வேண்டும்.
இருந்தால் தருக.

நன்றி. படித்தேன். ஆதாரம் போதாது.
ஆதாரம் தேட வேண்டும். தேடுவேன்.
தேடி வெளியிடுவேன்.


      



 



  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக