புதன், 11 டிசம்பர், 2019

சூரிய கிரகண விளக்க நிகழ்ச்சி!
நியூட்டன் அறிவியல் மன்றம் இணைந்து நடத்தியது!
புகைப்படக் காட்சிகள்!
--------------------------------------------------------------------------------
இடம்: ஒமேகா சர்வதேசப் பள்ளி, சென்னை
(Lalji memorial international school, Kolapakkam, Chennai 600 128)

நாள்: 10.12.2019 செவ்வாய் காலை 11 மணி முதல்.

அறிவியல் விளக்கம்:
--------------------------------
பி இளங்கோ, நியூட்டன் அறிவியல் மன்றம்
டாக்டர் சி சண்முகம் (அண்ணா பல்கலை, ஒய்வு)
சுகுபாலா (Breakthrough Science Society).

நிகழ்ச்சி ஏற்பாடு:
---------------------------
Ms சுதா (உதவிப் பேராசிரியர். ஈஸ்வரி பொறியியல் கல்லூரி)
திரு சதாசிவம் (Breakthrough Science Society)
Astronomy club of Omega International School மற்றும்
Breakthrough Science Society.

இப்பள்ளியில் ஆயிரக்கணக்கில் பிள்ளைகள் படிக்கின்றனர்.
12ஆம் வகுப்பு வரை உள்ளது. வெளி மாநில மாணவர்களும்
படிக்கும் பள்ளி இது. CBSE, Cambridge பாடத்திட்ட ம் உடையது.

வரும் டிசம்பர் 26ஆம் தேதி, கங்கண சூரிய கிரகணம்
(Annular solar eclipse) நிகழ்கிறது. இந்த கிரகணம் வளையம்
போன்ற வடிவில் தெரியும்.

சென்னையில் இது பகுதியளவிலான கிரகணமாகத்
தெரியும் (partial solar eclipse). விளக்கக் கட்டுரை பின்னர்.
நிகழ்ச்சியின் புகைப்படக் காட்சிகள் இதோ!
*********************************************************
இத்தகைய extra curricular நிகழ்ச்சிகளை தனியார்
பள்ளிகளும் CBSE பள்ளிகளும் அதிகமாக
முன்னெடுக்கின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில்
EXTRA CURRICULAR நிகழ்ச்சிகள் குறைவு.
இது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே அரசுப் பள்ளிகள் இது போன்ற நிகழ்ச்சிகளை
முன்னெடுக்க வேண்டும்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்குச் செலவு எதுவும்
கிடையாது. அறிவியல் சொற்பொழிவாளர்கள் யாரும்
சொற்பொழிவுக்கு காசு கேட்பது இல்லை.
சென்னை மற்றும் அருகிலுள்ள செங்கை காஞ்சிபுரம்
பள்ளிகளில் சென்று உரையாற்ற போக்குவரத்துக்
கட்டணமும் கேட்பதில்லை.

நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமல்ல, வேறு எந்த
ஒரு அறிவியல் அமைப்பும் போக்குவரத்துச் செலவுக்குப்
பணமோ சொற்பொழிவுக்குப் பணமோ கேட்பதில்லை.
எனினும் அரசுப் பள்ளிகளில் extra curricular நிகழ்ச்சிகளை
நடத்துவதில்லை.

இதற்கு என்ன காரணம்? குறைந்த சம்பளம் வாங்கும்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் extra curricular நிகழ்ச்சிகளை
அடிக்கடி நடத்தும்போது, அதிகச் சம்பளம் வாங்கும்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தலில் ஆர்வம்
காட்டுவதில்லை என்பது வேதனையே!     




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக