புதன், 11 டிசம்பர், 2019

இதில் மு க ஸ்டாலின் மீது பெரிதாகக் குற்றம் சொல்ல
முடியாது. பாவம், அவருக்கு ஆங்கிலம் தெரியாது.
ஆங்கிலப் பத்திரிகைகளைப் படித்துச் செய்திகளை
அறிந்து கொள்ள இயலாத அவரை நாம் குற்றம்
சொல்ல இயலாது.

செய்தி தெரிந்தாலும் அவர் என்ன சொல்லப் போகிறார்?
இந்த 200 படுகொலைகளுக்கும் பொறுப்பேற்று
எடப்பாடியார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்கு
மேல் அவர் என்ன சொல்லி விடப் போகிறார்?

சகஸ்கர நாம அர்ச்சனை என்றால் என்ன என்று
தெரியுமா? :"சகஸ்ரம்" என்பது சம்ஸ்கிருத எண்ணுப்
பெயர். பாஸ்கராச்சாரியார் என்னும் இந்தியக்
கணித மேதை பற்றித் தெரியுமா? தெரியாது.

அவர் தமது லீலாவதி என்னும் கணித நூலில்
எண்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஏக, தஸ, ஸத, சகஸ்ர என்று அடுக்கிக் கொண்டே
போவார். ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று பொருள்.
தொடர்ந்து அற்புதம், அப்ஜம்,பத்மம், ஸங்கம், ஜலதி
என்று மதிப்பு கூட்டிக் கொண்டே செல்வார்.

கணிதமெல்லாம் படிக்க முடியாது என்பவர்கள்
ராஜாத்தி அம்மாளிடம் சென்று சகஸ்கர நாம அர்ச்சனை
என்றால் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
எடப்பாடியை எதிர்த்து அறிக்கை விடுவதன் மூலம்
ஸ்டாலின் என்ன செய்கிறார்? எடப்பாடிக்கு சகஸ்கர
நாம அர்ச்சனை செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக