வெள்ளி, 8 ஜூலை, 2016

டேய், ராம்குமாருக்கு ஏற்பட்ட கதிதான்
உனக்கு ஏற்படும்!
------------------------------------------------------------------------------
அவள் ஒரு சிறுமி. பிளஸ் டூ படிப்பவள். இன்னும்
18 வயது நிரம்பாத மைனர் பெண். தினமும்
பள்ளிச்சீருடை  அணிந்து பள்ளிக்குச் செல்பவள்.
(பெயரை எழுத விரும்பவில்லை)

அவன் ஒரு கயவன். பெயர் செல்வக்குமார்.
வயது 23. தொழில்: கோயம்பேடு மார்க்கெட்டில்
தினக்கூலி.

பள்ளி செல்லும் இந்தச் சிறுமியை, தொடர்ந்து
வழிமறித்து தொல்லை கொடுத்து வந்தான்
இந்த செல்வக்குமார். அந்தப் பெண் இவனைப் 
புறக்கணித்தே வந்தாள்.

சில நாட்களுக்கு முன்பு, அந்தச் சிறுமியை மிரட்டி
இருக்கிறான் கயவன் செல்வக்குமார். என்னை
நீ காதலித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால்
சுவாதிக்கு நேர்ந்த கதிதான் உனக்கு ஏற்படும்
என்று கூறியிருக்கிறான்.

அந்தப் பெண் பயந்து போய், வீட்டில் சொல்லி,
பெற்றோர் போலீசில் சொல்லி, போலீசார்
அந்தக் கயவனைக் கைது செய்து சிறையில்
அடைத்துள்ளனர்.

சுவாதியைக் கொலை செய்த ராம்குமாரை
நாயைச் சுடுவது போல் போலீசார் சுட்டுத்
தள்ளி இருந்தால், அந்தச் சிறுமிக்கு இந்த நிலை
ஏற்பட்டு இருக்குமா? அப்போது,இந்தக் கயவனை
அந்தப் பெண் இப்படி மிரட்டி இருக்கும்:
"டேய், ராம்குமாருக்கு ஏற்பட்ட கதிதான்
உனக்கு ஏற்படும்".

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மூர்க்கத்
தனமாக அரசும் காவல்துறையும் ஒடுக்க
வேண்டும். குற்றவாளிகளை ஆதரிப்பதற்குப்
பதிலாக, குற்றவாளிகளுக்கு எதிராக மொத்த
சமூகமும் ஒன்று திரள வேண்டும்.

இல்லாவிட்டால், எந்தப் பெண்ணும் சாலையில்
செல்ல முடியாது.
*************************************************************** 
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக