ஞாயிறு, 17 ஜூலை, 2016

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
படுதோல்விக்குப் பின்னர் ஞானோதயம்!
----------------------------------------------------------------------------
திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளையும்
ஒரே நேரத்தில் எதிர்த்தது தவறு  என்று
இப்போது உணர்கிறோம்.

திருமாவளவன் கூறியது.
(புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல்)  

திருமாவளவன் சொல்லாதது:
----------------------------------------------------
எனவே திமுகவுடன் கூட்டுச் சேர விரும்புகிறோம்.
கலைஞர் எங்களை மன்னித்து கூட்டணியில் சேர்த்து
வாழ்வளிப்பார் என்று நம்புகிறோம்.

உண்மை நிலை!
---------------------------------
உள்ளாட்சித் தேர்தலில் புதிய கட்சிகளைக்
கூட்டணியில் சேர்க்க கலைஞர் விரும்பவில்லை.
தற்போதைய திமுக கூட்டணியை விரிவு படுத்த
கலைஞர் விரும்பவில்லை. அதற்கான தேவை
திமுகவுக்கு இல்லை.

ஒருதலைக்காதல்!
-------------------------------------
திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து கட்சியை அழிவில்
இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற திருமாவளவனின்
விருப்பம் ஒருதலைக் காதலாக மட்டுமே உள்ளது.
ஒரு கோடி திமுக தொண்டர்கள் விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்.

இதை திருமாவளவனின் உணர்ந்தே இருக்கிறார்.
இப்போதே திமுகவை ஆதரித்து வைத்தால்தான்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி
வைக்க ஏதுவாக இருக்கும் என்று கணக்குப்
போடுகிறார்.

ஆனால், பாவம், திருமாவளவன் ஏமாந்து போவார்.
திமுக அவரைக் கூட்டணியில் சேர்க்காது.
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக